அதுக்கெல்லாம் கலங்குவாரா ரஜினி?!!!

2nd of October 2013
சென்னை::இந்திய சினிமாவின் நுற்றாண்டு விழாவில் நடந்த சில அசவுகர்யங்களால் ரஜினி அப்செட் ஆவார் என்று பலரும் எதிர்பார்த்திருக்க, அவரோ கூலாக இருக்கிறார். இருந்தாலும், நான் அங்கு போயிருக்கவே கூடாது என்று இவர் சொன்னதாக இணையங்களில் வந்த செய்தி அவரை கவலைப்படுத்தியிருக்கிறதாம்.
 
நான் யாரிடமும் அப்படி சொல்லவேயில்லை. இத்தனைக்கும் என்னை உட்கார சொல்லி முன் வரிசையில் உட்கார்ந்திருந்தவர்கள் எழுந்தார்கள். நான்தான் நிற்கிறேன் என்று கூறிவிட்டேன். இந்த பிறவியில் அந்த இடத்தில் நான் நிற்க வேண்டும் என்பது விதியாக இருக்கும் பட்சத்தில், அதை மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்வதுதான் சரி.
 
அப்படி நிற்காமல் நான் உட்கார்ந்தால் அடுத்த பிறவியில் வேறெங்காவது நிற்க நேரிடும் என்று இந்த சம்பவத்திற்கும், செய்திக்கும் ஆன்மீக ரீதியாக ஒரு பதிலை சொல்லியிருக்கிறார் அவர்.
 
வாழ்வில் அனுபவங்களை சேகரித்த யாருக்கும் அவமானம் வந்து சேர்வதேயில்லை. அது மற்றவர்களுக்கு அவமானமாக தெரிந்தாலும்... கிரேட் ரஜினி சார்.

Comments