தனது படத்திலிருந்து ஜெய்யை ஓரம் கட்டினார் விஷால்!!!

24th of October 2013
சென்னை::தனது படத்திலிருந்து ஜெய்யை திடீரென நீக்கியுள்ளார் விஷால்.விஷால் பிலிம் பேக்டரி என்ற பெயரில் பட நிறுவனம் தொடங்கியுள்ளார் விஷால். இந்நிறுவனம் மூலம் பாண்டிய நாடு படத்தை அவர் தயாரித்துள்ளார். அடுத்ததாக திரு இயக்கும் படத்தை தயாரிக்கப்போவதாகவும் அதில் ஜெய் ஹீரோவாக நடிப்பார் என்றும் தான் அதில் நடிக்கவில்லை என்றும் விஷாலே கூறியிருந்தார். இந்நிலையில் திடீரென அந்த படத்திலிருந்து ஜெ

இது குறித்து விசாரித¢தபோது, இந்த படத்தில் நடிப்பதாக சொன்ன ஜெய் கால்ஷீட் ஒதுக்குவதில் ஆர்வம் காட்டவில்லையாம். இந்த படத்தில் நடித்தால் மற்ற பட ஷூட்டிங்குகள் பாதிக்கும் என கூறி வந்தாராம். இதனால் கடுப்பான விஷால், அவரே நடிப்பதாக திருவிடம் தெரிவித்துவிட்டார். அது பற்றி நண்பர்கள் கேட்டபோது, 2014 டிசம்பர் வரைக்கும் என்னுடைய கால்ஷீட் டைரி ஃபுல்லா இருக்கு என அலப்பறை செய்கிறாராம் ஜெய்ய்யை நீக்கியதுடன் ஹீரோ வேடத்தில் விஷாலே நடிக்கிறார்.  

Comments