எதுவா இருந்தாலும் என்கிட்டே கேளுங்க… : நஸ்ரியாவின் ‘சோஷியல் மீடியா’ ப்ளான்!!!

21st of October 2013
சென்னை::குரங்குப் புண்ணுக்கு அருமை காட்டினால் கொப்பிலே கொப்பிலே தாவுமாம் என்பது போல நஸ்ரியாவுக்கு கோடம்பாக்கம் காட்டிய கரிசனம் எல்லாமே இப்போது வீணாகி விட்டது. எல்லாம் அந்த இத்துணூண்டு தொப்புள் விவகாரம் தான்.
 
எல்லாமே தனக்கு சாதகமான அமையும் என்று எதிர்பார்த்து ‘நையாண்டி’ விவகாரத்தில் நெஞ்சை நிமிர்த்திய நஸ்ரியா இப்போது ஒடிந்து விழுந்த மரக்கொம்பு போல மனக்கஷ்டத்தில் இருக்கிறாராம்.
இதனால் தனக்கென்று ஆதரவை திரட்டி இன்னும் தனது கரங்களை வலுப்படுத்த திட்டமிட்டுள்ள அவர் தற்போது தனக்காக ஒரு டாட்காமை திறந்துள்ளார்.
 
இதில் தன்னைப்பற்றிய ‘வரலாற்று சுவடுகள்’ எல்லாவற்றையும் அப்டெட் செய்துள்ளார். அது மட்டுமில்லாமல் தனது ஃபேஸ்புக் பக்கத்திலும் தனது தரப்பு நியாயங்களை வெளிப்படுத்தப் போகிறாராம். அது மட்டுமில்லாமல் நேரம் கிடைக்கும் பொதெல்லாம் இந்த டாட்காமிலும், ஃபேஸ்புக் பக்கத்திலும் தனது ரசிகர்களுடன் உரையாடப் போகிறாராம் நஸ்ரியா. இதில்  நஸ்ரியாவைப் பத்தி மீடியாக்கள்ல வரும் எந்த நியூஸா இருந்தாலும் அதைச் சொல்லி டவுட்ஸ் கேட்கலாம். உண்மையை அவர் சொல்வாராம்.
நஸ்ரியாவின் வெப்சட்டை எட்டிப்பார்த்தவர்களின் எண்ணிக்கையை விட அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் லைக் குடுத்தவர்களின் எண்ணிக்கை தான் அதிகமாம்.
 
சொல்லப்போனால் பிரபல மலையாள சூப்பர் ஸ்டார்களான மோகன்லால், மம்முட்டி ஆகியோரைக் கூட லைக்குகள் வாங்குவதில் பின்னுக்கு தள்ளி முன்னுக்கு வந்துவிட்டார் நஸ்ரியா.
 
எது எது எப்ப நடக்கணுமோ அது அது அப்பத்தான் நடக்கும்…

Comments