சித்தார்த்தும் சமந்தாவும் திருமணத்துக்கு தயாராகிறார்கள்!!!

8th of October 2013
சென்னை::சித்தார்த்தும் சமந்தாவும் திருமணத்துக்கு தயாராகிறார்கள். இதற்காக புதுப்படங்களில் நடிப்பதை சமந்தா நிறுத்தியுள்ளார். சமந்தா தமிழில் ‘பானா காத்தாடி’, ‘நான் ஈ’, ‘நீ தானே என் பொன் வசந்தம்’ படங்களில் நடித்துள்ளார்.
 
தெலுங்கிலும் முன்னணி நடிகையாக உள்ளார். சித்தார்த்தும், சமந்தாவும் தெலுங்கில் ‘ஜாபர்தஸ்த்’ என்ற படத்தில் ஜோடியாக நடித்தனர். அப்போது நெருக்கம் ஏற்பட்டு காதல் வயப்பட்டனர். இருவரும் கோவில்களுக்கு குடும்பத்தினருடன் சென்று பூஜை, பிராத்தனைகளிலும் ஈடுபட்டார்கள். விரைவில் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார்கள்.
 
இளம் நடிகர்கள் உடன் ஜோடியாக நடிக்க வேண்டாம் என்று சமந்தாவுக்கு சித்தார்த் தடை போட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனவே தற்போது ஒப்பந்தமாகியுள்ள விஜய், சூர்யா படங்களை முடித்துவிட்டு நடிப்புக்கு முழுக்கு போட சமந்தா முடிவு செய்துள்ளார்.
 
அனுஷ்கா நடித்த அருந்ததி தற்போது அவர் நடித்துக் கொண்டிருக்கும் ருத்ரமாதேவி படங்களை போல் கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் வேடங்களில் மட்டும் நடிக்க முடிவு செய்துள்ளாராம்.

Comments