எனக்கு நானே போட்டி - நடிகை இனியா!!!


15th of October 2013
சென்னை::நடிகை இனியாவுக்கு யாரும் போட்டியில்லையாம். அவருக்கு அவரே போட்டி என்று அவரே தற்போது சொல்லியிருக்கிறார்.

ஈரோட்டில் கடை திறப்பு விழா ஒன்றில் கலந்துகொண்ட நடிகை இனியா, நிருபர்களிடம் பேசுகையில், " நடிகை என்ற அந்தஸ்தை எனக்கு கொடுத்தது, தமிழ் சினிமாதான். அதை என்றும் மறக்க மாட்டேன். சினிமா நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.

ஆக்ஷன் படங்களில் எனக்கு நடிப்பது மிகவும் பிடிக்கும். ஐ.பி.எஸ். அதிகாரியாக நடிக்க ஆசைப்படுகிறேன். மேலும் டான்சர் வாழ்க்கையை சித்தரித்து எடுக்கப்படும் சினிமா படத்திலும் நடிக்க ஆசைப்படுகிறேன். பாரதிராஜா படத்தில் இருந்து வெளியேறியதற்கு நான் காரணம் இல்லை. அமீர் அந்த படத்தில் இருந்து வெளியேறியதால் படத்தின் போக்கே மாறி விட்டது. இதனால் நான் படத்தில் இருந்து விலகி விட்டேன்.

தமிழில் பெரிய பெரிய நடிகர்கள் எல்லாம் இருக்கிறார்கள். எல்லோருடனும் நடிக்க ஆசைப்படுகிறேன். நடிகர் ரஜினியை எனக்கு ரொம்ப பிடிக்கும். அவர் படத்தில் நடிக்க விரும்புகிறேன். நடிகைகளில் பானுப்பிரியா, ஸ்ரீதேவி, சிம்ரன் போன்றோரை பிடிக்கும். எனக்கு யாரும் போட்டி இல்லை. நானே தான் எனக்கு போட்டி. சில படங்களில் கவர்ச்சியாக நடிக்கும் சூழ்நிலை வந்தால் நான் நடிப்பேன். ஆனால் சில நடிகைகள் கிளாமராக நடிக்க மாட்டேன் என்று கூறிவிட்டு போகப்போக டூ–பீஸ் உடைகளில் நடிக்கிறார்கள். நடிகைகளால் இதுபோன்ற வாக்குறுதியை காப்பாற்ற முடியாது. இதனால் கவர்ச்சி விஷயத்தில் எந்த வாக்குறுதியையும் அளிக்க விரும்பவில்லை." என்று தெரிவித்தார் 

Comments