கோபமுகம் காட்டுகிறார் ப்ரியாமணி!!!

30th of October 2013
சென்னை::ப்ரியாமணிக்குக் கல்யாணம் என்ற செய்திதான் அடிக்கடி முத்தழகுவை ஞாபகப்படுத்திக் கொண்டிருக்கிறது.

'பருத்தி வீரன்' படத்தில் கார்த்திக்கு ஜோடியாக அறிமுகமானார் ப்ரியாமணி. முதல் படத்திலேயே சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்றார்.

ஹோம்லி லுக் வந்து விடக்கூடாது என்பதற்காக கவர்ச்சிக் களத்தில் இறங்கினார். ஆனாலும், தமிழில் பிரகாசமான வாய்ப்புகள் அமையவில்லை.

இதனால், டோலிவுட் பக்கம் சென்ற ப்ரியாமணி அக்கடபூமியில் தாராளம் காட்டினார்.

இந்நிலையில் ப்ரியாமணிக்கு விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாகவும், அவரது வீட்டில் அவருக்கு மாப்பிள்ளை பார்த்து வருவதாகவும் செய்திகள் வெளியாகின.

இதுபற்றி ப்ரியாமணியிடம் விசாரித்தால் கோபமுகம் காட்டுகிறார்.
இப்போ நாலைஞ்சு படங்களைக் கையில வெச்சிக்கிட்டு பிஸியா நடிச்சிக்கிட்டிருக்கேன். அப்படி இருக்கும் போது ஏன் நான் மேரேஜுக்கு அவசரப் படணும்.

'படையப்பா' நீலாம்பரி மாதிரி வில்லியா நடிக்க விருப்பம்னு சொன்னேன். அதை, வில்லியா நடிக்கக்கூட நான் ரெடியா இருக்கேன்னு மாத்தி சொல்றாங்க '' என்று கொந்தளிக்கிறார்.
 
tamil matrimony_HOME_468x60.gif

Comments