ஆரம்பம்’ படத்தில் பஞ்ச் வசனங்கள் பேச அஜீத் மறுப்பு: தீபாவளிக்கு முன்பே அஜீத்தின் ‘ஆரம்பம்’ படம் ரிலீஸ்?!!!

16th of October 2013
சென்னை::அஜீத், ஆர்யா, நயன்தாரா, டாப்சி நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஆரம்பம்’. இப்படத்தை விஷ்ணுவர்தன் இயக்கியுள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். படம் ஆரம்பம் முதலே இப்படம் குறித்த பல தகவல்கள் வெளிவந்த உண்ணம் உள்ளன. பல்வேறு தரப்பினரும் இப்படத்தை பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்நிலையில், இப்படம் அஜீத் ரசிகர்களுக்கு தீபாவளி விருந்தாக வெளிவரவிருக்கிறது.

ஆரம்பம் படம் குறித்து பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்து வரும் நிலையில், இப்படத்தின் கதாசிரியர்களான சுபா இப்படம் குறித்து தங்களுடைய அனுபவங்களை கூறியுள்ளனர்.

இயக்குனர் விஷ்ணுவர்த்தன் அஜீத்தை வைத்து ஒரு படத்தை எடுக்க போகிறோம் என கூறியபோது, அப்படம் அஜீத் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி  செய்ய வேண்டும் என்ற எண்ணமே கதையாக உருவெடுத்தது.

மூன்று மாதங்களுக்கு பிறகு கதை கருவை அவரிடம் பகிர்ந்துகொள்ள முதன்முதலாக அஜீத்தை சந்தித்தபோது அவரது எளிமை எங்களை கவர்ந்தது. ஒரு நட்சத்திரத்துக்குரிய எந்த பந்தாவும் இல்லாமல் இருந்தது வியப்பு ஊட்டியது. அந்த வியப்பு அடங்கும் முன்னரே அவர் விடுத்த வேண்டுகோள் எங்களை மேலும் வியப்பூட்டியது. அது படத்தில் தன்னை புகழும் காட்சிகளோ, வசனங்களோ, பஞ்ச் வசனங்களோ இருக்கக்கூடாது என்பதுதான். கதைக்குதான் நாயகனே தவிர நாயகனுக்கு கதை இல்லை என்பதை தெளிவாக வலியுறுத்தினார்.

அவர் தன்னுடன் நடிக்கும் மற்ற நடிகர்களுக்கும் முக்கியத்துவம் இருக்கும் வகையில் காட்சி அமைப்பை அமைக்குமாறு இயக்குனரிடம் கூறியதை கேட்டபிறகுதான் அஜீத்துக்கு அவர் மீதுள்ள தன்னம்பிக்கையின் அர்த்தம் புரிந்தது. அந்த தன்னிம்பிக்கை அவருடன் பணியாற்றும் மற்றவர்களுக்கும் ஒட்டி கொண்டது என்றால் மிகை ஆகாது.

படத்துக்காக அவர் எடையை குறைத்தால் நன்றாக இருக்கும் என்ற உடனே பல ஆபரேஷன் செய்துள்ள அவரது உடல் நிலையையும் மீறி ஒரு தினத்துக்கு 5 முதல் 6 மணி நேரம் வரை அயராமல் உடற்பயிற்சி செய்த அவரது கடமை உணர்ச்சிதான் அவரை இந்த உயரத்துக்கு கூட்டி சென்று இருக்கும் என தெளிவாக புரிந்தது.

நாங்கள் பல நடிகர்களின் படங்களில் பணிபுரிந்து இருக்கிறோம், பணியாற்றிக் கொண்டு இருக்கிறோம். ஆனால் இதுவரை எந்த படத்துக்கும் ‘ஆரம்பம்’ படத்தை பற்றிய ஆர்வம் போல் கண்டதில்லை. எல்லா தரப்பு ரசிகர்களும் இந்த படத்தை எதிர்பார்த்து கொண்டு இருப்பதை பார்க்கும்போதுதான் அவருடைய ரசிகர்கள் வட்டாரம் எந்த அளவுக்கு பரந்து உள்ளது என்பது புலபடுகிறது.

ஏராளமான பொருட்செலவு, விஷ்ணுவின் ஸ்டைலிஷ் இயக்கம் , யுவன் ஷங்கர் ராஜாவின் மெய் மறக்கும் இசை ஆகியவை அந்த எதிர்பார்ப்பை சந்திக்கும் என நம்பிக்கை எங்களுக்கு நிச்சயம் உண்டு. ஆர்யாவும் அஜீத்துக்கும் உள்ள பரஸ்பர மரியாதை, சிநேகம் ஆகியவை தமிழில் இனிமேல் பல நட்சத்திரங்கள் இணைந்தது நடிக்கும் காலம் வரும் என நம்பிக்கை தருகிறது. அதற்கு இந்த படம் தான் ஆரம்பம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்..
 
தீபாவளிக்கு முன்பே அஜீத்தின் ‘ஆரம்பம்’ படம் ரிலீஸ்?!!!
 
அஜீத்தின் ‘ஆரம்பம்’, கார்த்தியின் ‘ஆல் இன் ஆல் அழகுராஜா’, விஷாலின் ‘பாண்டியநாடு’ ஆகிய மூன்று படங்களும் தீபாவளிக்கு வரும் என அறிவிக்கப்பட்டது. மூன்றும் பெரிய படங்கள் என்பதால் தியேட்டர்களை பகிர்ந்து கொள்வதில் இழுபறி ஏற்பட்டது. அத்துடன் ‘ஆரம்பம்’ படத்துக்கு எதிராக கோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டது.

வழக்கு விவகாரத்தில் சமரச பேச்சுவார்த்தைகள் நடப்பதாகவும் விரைவில் சுமூக தீர்வு ஏற்படும் என்றும் ‘ஆரம்பம்’ படவட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் ‘ஆரம்பம்’ படத்தை தீபாவளிக்கு இரு தினங்களுக்கு முன்பாக அக்டோபர் 31–ந்தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இப்படத்தில் அஜீத் ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். ஆர்யா, டாப்சியும் இன்னொரு ஜோடியாக வருகிறார்கள். விஷ்ணுவர்தன் இயக்கியுள்ளார்.

‘ஆல் இன் ஆல் அழகுராஜா’ படம் தமிழ்நாடு முழுவதும் 300 தியேட்டர்களில் ரிலீசாகிறது. இதில் கார்த்தி, காஜல் அகர்வால் ஜோடியாக நடித்துள்ளனர்.

‘பாண்டியநாடு’ படத்தில் விஷால், லட்சுமிமேனன் ஜோடியாக நடித்துள்ளனர். இப்படத்தை விஷாலே முதல் தடவையாக தயாரித்து உள்ளதால் பலத்த எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது. சுசீந்திரன் இப்படத்தை இயக்கியுள்ளார்.

இவைகள் தவிர ஹிருத்திக் ரோஷன் நடித்துள்ள ‘கிரிஷ்3’ படமும் தமிழ், இந்தியில் தீபாவளிக்கு ரிலீசாகிறது. தமிழ்நாடு முழுவதும் 100 தியேட்டர்களில் இப்படம் திரையிடப்படுகிறது.
tamil matrimony_INNER_468x60.gif

Comments