ஹீரோக்களைத் தொடர்ந்து ஹீரோயினிகளும் வரிந்து கட்டுகிறார்கள்!!!

31st of October 2013
சென்னை::பின்னணி பாடகர்-பாடகிகள் என்னதான் சிறப்பாக பாடினாலும், நடிகர்கள் பாடும் பாடல்கள்தான் சமீபகாலமாக ஹிட்டாகி வருகின்றன. அதனால் இசையமைப்பாளர்களும் தாங்கள் இசையமைக்கும் ஒவ்வொரு படங்களிலும் அப்படங்களின் ஹீரோக்களுக்கு பாட வாய்ப்பளித்து வருகின்றனர். அதோடு, அந்த பாடல்கள் யூ டியூப்பில் பிரத்யேகமாக வெளியிட்டு அவர்களின் ரசிகர்களை வைத்தே அதை ஹிட் பாடலாக்கி விடுகின்றனர்.

இந்த நிலையில், ஸ்ருதிஹாசன், ரம்யா நம்பீசன் போன்ற நடிகைகளும் தற்போது சில படங்களில் பாடி வருகின்றனர். அதிலும் ஸ்ருதிஹாசன் தனது வாய்ஸை வித்தியாசப்படுத்தி மாடர்னாக பாடுவதால் பாலிவுட்டிலும் அவருக்கு மவுசு ஏற்பட்டுள்ளது. அதனால் இப்போது மேலும் சில நடிகைகளும் தங்களுக்குள் இருக்கிற இசை ஆர்வத்தை இசையமைப்பாளர்களிடம் வெளிப்படுத்தி பாட சான்ஸ் கேட்டு வருகின்றனர்.

இதில் வை ராஜா வை படத்துக்கு இசையமைக்கும் யுவன்ஷங்கர் ராஜாவிடம், அப்பட நாயகியான ப்ரியாஆனந்த் படத்திற்கு பூஜை போட்டதில் இருந்தே தன்னை ஒரு பாடல் பாட வைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டு வருகிறாராம். அதனால் பட டைரக்டர் ஐஸ்வர்யாவின் ஒப்புதலோடு தற்போது ப்ரியாஆனந்துக்கு ஒரு பாடல் கொடுக்க முன்வந்துள்ளாராம் யுவன்.

சமீபத்தில் அவரை தனது இசைக்கூடாரத்துக்கு அழைத்தவர், ஒரு டியூனை போட்டுக்காண்பித்து, அதை நன்றாக பயிற்சி எடுத்து விட்டு வருமாறு கூறியுள்ளாராம். அதனால் பரீட்சைக்கு படிக்கிற பிள்ளை போன்று அந்த டியூனை எந்நேரமும் முணுமுணுத்தபடியே ஸ்பாட்டில் இருக்கிறாராம் ப்ரியாஆனந்த்.

tamil matrimony_INNER_468x60.gif

Comments