காதல் கல்யாணம் தான் பெஸ்ட் - நடிகர் ஜெய்!!!

6th of October 2013
சென்னை::ராஜா ராணி படத்தில் பங்குபெற்ற அனைவரும் சந்தோஷத்தில் இருக்கிறார்கள் என்றால், நடிகர் ஜெய், அவர்களை காட்டிலும் ஒரு படி மேலே சந்தோஷத்தில் இருக்கிறார். காரணம், அவருடைய நடிப்பை பற்றி ஊடகங்கள் ரொம்ப பலமாகவே புகழ்ந்துள்ளது.

இந்த சந்தோஷத்தை கொடுத்த ஊடகங்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சமீபத்தில் அனைத்து பத்திரிகையாளர்களையும் ஜெய் சந்தித்தார்.

தனது முதல் படத்திற்கு பிறகு, தொடர்ந்து படங்கள் தேர்வு செய்வதில் சில குளறுபடிகள் ஏற்பட்டு விட்டது, இந்த முறை அப்படி நடக்காமல் இருக்க, ரொம்பவே நிதானமாக பட்னக்களை தேர்வு செய்து வருகிறேன். அந்த வரிசையில் ராஜா ராணி படமும் ஒன்று. இப்படத்திற்கும், எனக்கும் ஒத்துழைப்பு கொடுத்த அனைவருக்கும் நன்றி என்று குறிய ஜெயிடம், முதல் கேள்வியே காதலைப் பற்றி எழ, "நான் யாரையும் காதலிக்க வில்லை, அதற்கு நேரமும் இல்லை. சினிமாவில் நல்ல இடத்தை பிடிக்க வேண்டும்." என்று பதில் சொன்னார்.

அடுத்த கேள்வியாக ஆந்திராவில் இருக்கும் அஞ்சலியை இழுக்க, அவங்கள பார்த்து ரொம்ப நாளாகுது, போன்ல கூட பேசறது இல்ல, நீங்க பார்த்தா சொல்லுங்க என்று ரொம்ப புத்திசாலிதனமாக பதில் சொன்னார்.

பிறகு, தனது அடுத்ஹ்டப் படங்கள் குறித்தும், அவற்றில் தனது கதாபாத்திரம் குறித்தும் சொன்ன, ஜெய், இறுதியில் திருமணத்தைப் பற்றி சொல்லும் போது, "கா
தல் கல்யாணம் தான் பெஸ்ட்" என்று சொன்னார்.

Comments