சினிமா போலியான உலகம் - மல்லிகா ஷெராவத்!!!


5th of October 2013
சென்னை:: பாலிவுட் கவர்ச்சி நடிகையான மல்லிகா ஷெராவத், சினிமா என்பது கவர்ச்சி ஆனது, அது போலியான உலகம் என்று கூறியுள்ளார்.

பாலிவுட் கவர்ச்சி கண்ணியாக திகழும் மல்லிகா ஷெராவத், ஜாக்கி ஜானுடன் ஒரு ஆங்கிலப் படத்திலும், கமல்ஹாசனுடன் தசாவதராம் படத்திலும் நடித்துள்ளார். மேலும் ஒஸ்தி படத்தில் சிம்புவுடன் இணைந்து ஒரு பாடலுக்கு நட்னம் ஆடியுள்ளார்.

திரையுலக பிரமுகர்கள் மற்றும் தொழிலதிபர்களுடன் காதல் என்று இவரைப் பற்றி பல கிசுகிசுக்கள் வந்துள்ள நிலையில், தற்போது அவரே தனது திருமணம் குறித்து பேட்டியளித்துள்ளார். அந்த பேட்டியில், "சினிமாவில் இருப்பவர்கள் யாரும் என்னை கவர வில்லை. எனவே சினிமா துறையில் இருப்பவர்கள் என் வாழ்க்கையில் வர முடியாது. சினிமா கவர்ச்சியானது. போலியான உலகம். வாழ்க்கையோடு இதனை இணைக்க முடியாது.

நிறைய நடிகைகள் டாக்டர்கள், என்ஜினீயர்கள், தொழில் அதிபர்கள் என்று தான் திருமணம் செய்து கொண்டுள்ளனர். நடிகர்களை கணவராக தேர்வு செய்யவில்லை. சினிமாவும் நிஜ வாழ்க்கையும் வேறு திருமணம் என்று வரும் போது நிஜ வாழ்க்கையில் இருப்பவர்களையே நடிகைகள் விரும்புகின்றனர். நானும் அப்படித்தான் சினிமாவில் இல்லாதவரையே மணப்பேன்." என்று மல்லிகா ஷெராவத் கூறியுள்ளார். 

Comments