சிறந்த கேரக்டர் கொண்ட படங்கள் அமையும் வரை எந்த படத்திலும் நடிக்கப்போவது இல்லை: சமந்தா!!!

8th of October 2013
சென்னை::எனக்கு பிடித்தமான, சிறந்த கேரக்டர் கொண்ட படங்கள் அமையும் வரை நான் எந்த படத்திலும் நடிக்கப்போவது இல்லை, அதுவரை நான் ஸ்டிரைக் என்று நடிகை சமந்தா அறிவித்துள்ளார். ‘மாஸ்கோவின் காவிரி’, ‘பாணா காத்தாடி’ போன்ற படங்களில் நடித்த சமந்தா, ‘நான் ஈ’ படம் மூலம் தமிழில் பிரபலமானார். தமிழைக்காட்டிலும் தெலுங்கில் நம்பர்-1 நடிகையாக வலம் வந்து கொண்டு இருக்கிறார். இவரது கால்ஷீட்டுக்காக பல டைரக்டர்கள் காத்திருந்து கால்ஷீட் பெறுகின்றனர். இந்நிலையில் நான் படங்களில் நடிக்கபோவதில்லை என்று அறிவித்துள்ளார்.

இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில், நான் ஸ்டிரைக் என்று குறிப்பிட்டுள்ளதோடு, அதற்கான விளக்கமும் கொடுத்துள்ளார். அதாவது, இனி எந்த புதுப்படங்களிலும் நடிக்கப் போவது கிடையாது. எனக்கு பிடித்தமான, நல்ல கேரக்டர் கொண்ட படங்கள் கிடைக்கும்வரை எனது முடிவில் மாற்றம் கிடையாது. அதேசமயம் நான் ஏற்கனவே ஒப்புக்கொண்ட படங்களில் நடிப்பேன் என்று கூறியுள்ளார்.

சமந்தாவின் இந்த அறிவிப்பால் தெலுங்கு பட உலகம் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளது.

Comments