வீட்டோட மாப்பிள்ளை தேடும் ஆடுகளம் டாப்ஸி!!!

18th of October 2013
சென்னை::ஆடுகளம் டாப்ஸியின் மார்க்கெட் கடந்த ஆண்டு மந்தமான நிலையில் இருந்தாலும், இந்த ஆண்டு பரபரப்பு கூடியிருக்கிறது. தமிழில் அஜீத்தின் ஆரம்பம், லாரன்சின் முனி-2 கங்கா ஆகிய படங்களில் நடித்திருக்கும் டாப்ஸி, தெலுங்கில் குண்டல்லோ கோதாவரி, ஷேடோ, சகாசம், இந்தியில் சாஸ்மி பட்டூர் என பிஸியாக நடித்துக்கொண்டிருக்கிறார்.

அதனால் இதே மாதிரி இன்னுமொரு பத்து ஆண்டுகளாவது சினிமாவில் நீடித்து விட வேண்டும் என்று நினைக்கும் டாப்ஸி, படத்துக்குப்படம் கதாநாயகியாகத்தான் நடிப்பேன் என்ற கொள்கையை தற்போது தளர்த்தியிருக்கிறாராம். காரணம், கதாநாயகிக்கு இப்போது சினிமாவில் மூன்று, நான்கு ஆண்டுகள்தான் லைப்பாகி விட்டது. ஆனால், மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்தாலும் நான் நினைப்பது போல் பத்து ஆண்டுகள் கட்டாயம் சினிமாவில் இடம்பிடித்திருக்கலாம்.

அதன்பிறகு மனசுக்குப்பிடித்த ஒரு மாப்பிள்ளையை பார்த்து திருமணம் செய்து கொண்டு பிடித்த நாட்டில் போய் செட்டிலாகி வாழ்க்கையை என்ஜாய் பண்ண வேண்டியதுதான் என்கிறார் டாப்ஸி.

மனசுக்குப்பிடித்த மாப்பிள்ளையை எந்த மாதிரி கற்பனை செய்து வைத்திருக்கிறீர்கள்? என்று அவரைக்கேட்டால், பெரிய அழகனாக இருக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால், நல்லவராக இருக்க வேண்டும். என்னை மட்டுமே நேசிக்கக்கூடியவராகவும், இப்போது நான் என் அப்பா, அம்மாவை கவனித்துக்கொள்வது போன்று எதிர்காலத்தில் என்னுடனேயே இருந்து எனது பெற்றோரையும அவர் பார்த்துக்கொள்ள வேண்டும். அந்த மாதிரி வீட்டோட மாப்பிள்ளையாக தேடிக்கொண்டிருக்கிறேன் என்று சொல்லும் டாப்ஸி, ஒருவேளை அவர் கூடிய சீக்கிரமே கிடைத்துவிட்டால், நான் திருமணம் செய்து கொள்ளும் காலம் வரை அவரை காதலித்துக்கொண்டேயிருப்பேன் என்கிறார்.

Comments