ஹன்சிகா மீது வழக்கு போடுவேன் - தயாரிப்பாளர் அதிரடி!!!

3rd of October 2013
சென்னை::'சீதாராமகல்யாணம் லங்கலோ' என்ற தெலுங்கு படம் தமிழில் டப் செய்யப்பட்டு 'ரவுடி கோட்டை' என்ற தலைப்பில் வெளியாக உள்ளது. இப்படத்தில் நாயகியாக நடித்துள்ள ஹன்சிகா, தனது அனுமதி இன்றி, இந்த படத்தை தமிழில் வெளியிடுவதால், இதற்கு தடை விதிக்க வேண்டும் என்று நடிகர்கள் சங்கத்தில் முறையிடுவேன் என்று கூறியிருந்தார்.

ஹன்சிகாவின் குற்ற சாட்டிற்கு பதிலடி கொடுத்துள்ள தயாரிப்பாளர் எஸ்.சுந்தரலட்சுமி, ஹன்சிகா மீது வழக்கு போடுவேன் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து தயாரிப்பாளர் எஸ்.சுந்தரலட்சுமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தெலுங்கில் வெளியான 'சீதாராமகல்யாணம் லங்கலோ' என்ற படத்தை தமிழில் மொழிமாற்றம் செய்ய அதன் தயாரிப்பாளர் வெல்கார் எண்டர்பிரைசஸ்,விஜய்மல்லா பிரசாத் என்பவரிடமிருந்து வாங்கினேன். படத்தின் மொழிமாற்றம் மற்றும் அனைத்து வேலைகளையும் முடித்து  'ரவுடி கோட்டை' என்ற பெயரில் திரையிட முடிவான நேரத்தில் இது மாதிரி ஒரு புகார் குறித்து அதிர்ச்சி அடைந்தேன்.

நடிகை ஹன்சிகாவுக்கும் தெலுங்கு பட அதிபருக்கும் இடையே எந்த மாதிரியான ஒப்பந்தம் ஏற்படுத்த பட்டுருக்கிறது என்பது எங்களுக்கு தெரியாது. நாங்கள் அந்த தயாரிப்பாளரிடம் கேட்டதற்கு, "ஹன்சிகா சொல்லவது மாதிரி தெலுங்கை தவிர வேறு எந்த மொழியிலும் மொழிமாற்றம் செய்ய கூடாது என்று ஒப்பந்தம் எங்களுக்குள் எதுவும் இல்லை. வாய்மொழியாகக்  கூட  அவர் கேட்கவும் இல்லை. நாங்களும் வாய்மொழியாக கூட ஒப்புக்கொள்ள வில்லை." என்று அவர் கூறினார்.

அப்படி ஹன்சிகா தடை கேட்டோ, வழக்கு தொடர்வதாகவோ  இருந்தால் தெலுங்கு பட அதிபர் மீது தான் தொடரவேண்டும். எங்கள் மீது அவர் எடுக்கும் எந்த நடவடிக்கையும் எங்களை கட்டுப்படுத்தாது.  இதை ஹன்சிகாவுக்கும் அவர் சம்மந்த பட்டவர்களுக்கும் தெரிவித்து கொள்கிறோம்.

மேற்படி ஹன்சிகா நடிகர் சங்கத்தில் எங்கள் மீது எடுத்த நடவடிக்கையை விலக்கி கொள்ள வேண்டும். இல்லை என்றால் ஹன்சிகா மீது சட்ட பூர்வமாக நடவடிக்கை எடுக்க நேரிடும். ஏற்பட்டுள்ள நஷ்டத்தையும் ஹன்சிகா தான் ஏற்க வேண்டும்.

இவ்வாறு சுந்தரலட்சுமி தெரிவித்துள்ளார்.

Comments