காமெடி நடிகர் சுருளி மனோகர் இயக்கும் 'இயக்குநர்'!!!

17th of October 2013
சென்னை::தொலைக்காட்சி காமெடி தொடர்களிலும், திரைப்படங்களிலும் காமெடி நடிகராக வலம் வந்துக்கொண்டிருக்கும் சுருளி மனோகர், இயக்குநர் அவதாரம் எடுத்துள்ளார். இவர் இயக்கும் முதல் படத்திற்கு 'இயக்குநர்' என்று தலைப்பு வைத்துள்ளார்.

கிராமத்தில் இருந்து திரைப்பட இயக்குநராக வேண்டும் என்ற கனவில் சென்னைக்கு வரும் இளைஞர் ஒருவர், தான் ஒரு படம் இயக்க வேண்டும் என்றும், அப்படி இயக்கிய அப்படத்தின் 100வது நாள் விழாவில் தான் தனது திருமணம் நடைபெற வேண்டும் என்றும் நினைக்கிறார். அப்படி அவர் நினைத்தது போல நடந்ததா இல்லையா என்பதுதான் இப்படத்தின் கதை.

இயக்குநர் சுருளி மனோகர், காமெடி நடிகர் என்பதானலேயே என்னவோ, இப்படி ஒரு சீரியஸான கதையையே ரொம்ப காமெடியாக சொல்ல முடிவு எடுத்துள்ளாராம்.

ஜெயலஷ்மி கோல்டன் ஜூப்ளி பிலிம்ஸ் சார்பில் ரங்கா ரெட்டி தயாரிக்கும் இப்படத்திற்கு சங்கர் கணேஷ் இசையமைக்கிறார். இ.மணிகண்டன் ஒளிப்பதிவு செய்கிறார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குவதோடு, இப்படத்தில் ஒரு கதாபாத்திரல் சுருளி மனோகர் நடிக்கவும் செய்கிறார்.

கிங்காங், போண்டாமணி, ஜாஸ்பர், மனோபாலா, பாலு ஆனந்த், குண்டு கல்யாணம், பாண்டு, அல்வா வாசு, குள்ளமணி, பாவா லட்சுமணன், தேவதர்ஷினி, ஜெய்கணேஷ், ஜெயமணி உள்ளிட்ட ஏராளமான நகைச்சுவை நடிகர்கள் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு இன்று (அக்.16) சென்னை, ராஜா அண்ணாமலை மன்றத்தில் பூஜையுடன் தொடங்கியது.

இதில் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா, இசையமைப்பாளர் சங்கர் கணேஷ் உள்ளிட்ட ஏராளமான திரை பிரமுகர்கள் கலந்துகொண்டார்கள். 

Comments