ஆசைப்பட்ட கார்த்தி! அவாய்ட் பண்ண கவுண்டமணி!!!

24th of October 2013
சென்னை::தனது சொல்லு பேச்சினால் தமிழ் சினிமாவில் பல ஆண்டுகள் கொடிகட்டிப் பறந்த காமெடி நடிகர் கவுண்டமணி, பல ஆண்டுகளாக சினிமாவை விட்டு ஒதுங்கியிருக்கிறார். பலர் அவரை நடிக்க அனுகினாலும், அதற்கு அவர் கேட்கும் சம்பளம் அனைவரையும் அலரவைத்ததாம்.

தற்போது உங்களுக்கு மார்க்கெட் இல்லையே! என்று யாராவது சொன்னால், தனது பாணியில், "எனக்கு மார்க்கெட் உல்ல, அதனால எனக்கு வாய்ப்பு கொடுங்க என்று உங்க கிட்ட நான் கேட்டேனா, நீங்களா வரிங நடிகங்க இன்னு சொல்றிங்க, அப்புறம் என்னய்யா" என்று அனைத்து வாய்ப்புகளையும் நிராகரித்து வந்தவர், தற்போது வாய்மை என்ற படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார்.

அதுமட்டும் இன்றி, வேறு ஒரு படத்தில் கதாநாயகனாகவும் கவுண்டமணி நடிக்கப் போகிறார். இந்த நிலையில், நடிகர் கார்த்திக்கு கவுண்டமணி மீது தீடீர் ஆசை வந்திருக்கிறது. அதாவது, அவர் நடிப்பில் தீபாவளியன்று 'ஆல் இன் ஆல் அழகுராஜா' படம் வெளியாகவுள்ளது. இந்த தலைப்பை பிரபலப்படுத்தியதே கவுண்டமனி தான், இந்த கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் மனுஷன் சிரி சிரி என்று சிரிக்க வைத்ததை யாராலும் மறக்க முடியாது. கார்த்தியாலையும் அதை மறக்க முடியவில்லை.

அதனால் தான், ஆல் இன் ஆல் அழகுராஜா படத்தில் ஒரு காட்சியில் கவுண்டமணியை நடிக்க வைக்க வேண்டும் என்று கார்த்தி, இயக்குநர் ராஜேஷ் என அனைவரும் ஆசைப்பட்டிருக்கிறார்கள். ஆனா, இவர்களின் அனைத்து முயற்சிகளும் தோல்வியாகவே அமைந்துள்ளது.

எவ்வளவோ முயற்சி செய்தும் கவுண்டமணி சாரை, எங்கள் படத்தில் நடிக்க வைக்க முடிக்கவில்லை என்பது தனக்கு ஏமாற்றமாக உள்ளது என்று கார்த்தி பேட்டி ஒன்றில் சொல்லியிருக்கிறார்.

Comments