‘ஐ’படத்தின் க்ளைமாக்ஸ் காட்சி சென்னை தரமணியில்!!!

7th of September 2013
சென்னை::ஷங்கர் இப்போது ‘ஐ’படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியை எடுத்துக்கொண்டு இருக்கிறார்.
 
சென்னை தரமணியில் உள்ள
மாநில வணிக கல்வி பயிலகம் என்ற கல்லூரியில் ஷூட்டிங் நடக்கிறது.
 
லொக்கேஷன் சார்ஜை வாரி வழங்கிய ஷங்கர் வழக்கம்போல இன்னொரு வேலையைச் செய்திருக்கிறார்.
 
கதைப்படி ஒரு பில்டிங்கை அழகாகக் காட்ட வேண்டுமாம். அதற்காக எங்கள் யூனிட் செலவில் நாங்களே பெயின்ட் அடித்துக் கொள்கிறோம் என்று நிர்வாகத்திடம் அனுமதி வாங்கினாராம்.
 
இது கல்வி சம்பந்தப்பட்ட இடம். அதனால் நம்மால் முடிந்த அளவு மற்ற பில்டிங்குகளுக்கும் பெயின்ட் அடித்து கொடுத்துவிடுங்கள் என்று தனது புரொடக்ஷன் மேனேஜரிடம் கூறிவிட்டாராம்.
 
பெயின்ட் அடிப்பதற்கு மட்டுமே கிட்டத்தட்ட முப்பது லட்சம் செலவு செய்ய வேண்டிய நிலை வந்ததால் நொந்துபோய் இருக்கிறார் தயாரிப்பாளர்.

Comments