திரிஷாவுக்கு விரைவில் டும்.டும்.டும்!!!

6th of September 2013
சென்னை::திரிஷாவுக்கும் தெலுங்கு நடிகர் ராணாவும் விரைவில் திருமணம் நடக்க உள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
 
கடந்த 2002ம் ஆண்டு வெளியான மௌனம் பேசியதே திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் திரிஷா. 10 ஆண்டுகளுக்கு மேலாக சினிமாவில் சாதித்து வரும் இவர் தமிழில் மட்டும் இதுவரை 20க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார்.
 
தற்போது அவருக்கு தமிழில் சொல்லிக்கொள்ளும் படம் எதுவும் இல்லை. இந்நிலையில் திரிஷாவுக்கு மணம் முடித்து பார்க்க வேண்டும் என்பது அவரது தாய் உமா கிருஷ்ணனின் எண்ணமாம். இதற்கு திரிஷாவும் சம்மதம் சொல்லிவிட்டாராம். தெலுங்கு நடிகர் ராணாவை திருமணம் செய்து கொள்ள அவர் முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இருவரும் காதலிப்பதாக ஏற்கனவே கிசுகிசுக்கள் பரவின.
 
ராணா வீட்டில் எதிர்ப்பு இருந்ததால் திருமணத்துக்கு தாமதமானதாகவும் இப்போது அவர்கள் சம்மதித்து விட்டதாகவும் கூறப்படுகிறது. எனவே ஒரு சில மாதங்களில் திரிஷா–ராணா திருமணம் நடக்கும் என நெருக்கமானவர்கள் கூறினர்.

Comments