ஓவியாவின் இன்னொரு அவதாரம்!!!

23rd of September 2013
சென்னை::ஓவியா ஹீரோயினாக நடித்த, ‘மூடர்கூடம்’ படம் வெளியாகி ஓடிக்கொண்டிருக்க, அடுத்து இசை அமைப்பாளர் ஜீ.வி.பிரகாஷ்குமாரின் தயாரிப்பான ‘மதயானைக்கூட்டம்’ ரிலீசாகவிருக்கிறது. இந்தப் படத்தில் ஓவியா ஒரு மலையாளி மியூசிக் ஸ்டூடன்டாக நடிக்கிறார்.
 
இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது டப்பிங் வேலைகள் சுறுசுறுப்பாக நடந்து வருகிறது. இதில் ஓவியாவின் கேரக்டர் தமிழும், மலையாளமும் கலந்து பேசக்கூடிய மாதிரி அமைந்திருப்பதால் அந்த கேரக்டருக்கு மலையாளியான ஓவியாவே குரல் கொடுத்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்த படக்குழுவினர் அவரையே டப்பிங் பேச வைத்துள்ளனர்.
 
இந்தப் படத்திற்கு முதன் முதலாக டப்பிங் பேசியிருப்பது வித்தியாசமான ஒரு அனுபவம் என்று சொன்ன ஓவியா, வாய்ப்பு கொடுத்தால் இனி வரும் படங்களிலும் டப்பிங் பேச தயாரா இருக்கேன் என்றும் கூறியிருக்கிறார். ஆக, மதயானைக்கூட்டம்’ படம் மூலம் டப்பிங் கலைஞராகவும் அவதாரம் எடுத்திருக்கிறார் ஓவியா! கலக்குங்க ஓவியா. 

Comments