வெண்ணிலா கபடி குழு, பஞ்சாமிர்தம் போன்ற படங்களில் ஹீரோயினாக நடித்த சரண்யா மோகன் மீண்டும் ஹீரோயின் ஆனார்!!!

 
30th of September 2013
சென்னை::வெண்ணிலா கபடி குழு, பஞ்சாமிர்தம் போன்ற படங்களில் ஹீரோயினாக நடித்தவர் சரண்யா மோகன். இவர் தனுஷ் நடித்த யாரடி நீ மோகினி படத்தில் நயன்தாரா தங்கையாகவும், வேலாயுதம் படத்தில் விஜய் தங்கையாகவும் நடித்தார். தங்கை வேடத்தில் நடித்த சரண்யா மோகனுக்கு தொடர்ந்து அதேபோல் வேடங்கள் வந்தது. இதனால் மலையாள படங்களில் கவனம் செலுத்தி வந்தார்.

தற்போது கோலாகலம் படத்தில் மீண்டும் ஹீரோயின் வேடம் ஏற்றிருக்கிறார். இப்படத்தை பி.ஜி.சுரேந்திரன் எழுதி தயாரிப்பதுடன் இயக்குனர் பொறுப்பும் ஏற்றிருக்கிறார். ஹீரோவாக புதுமுக நடிகர் அமல் நடிக்கிறார். இப்படம்பற்றி இயக்குனர் பி.ஜி. சுரேந்திரன் கூறும்போது,அழுத்தமான காதல் கதையாக உருவாகும் இப்படத்தில் அமல், சரண்யா மோகன் ஜோடியுடன் கஞ்சா கருப்பு, தேவதர்ஷினி, மீரா கிருஷ்ணன், வியட்நாம் வீடு சுந்தரம், மனோபாலா, விஷ்வந்த் என பலர் நடிக்கின்றனர், கே.எஸ்.செல்வராஜ் ஒளிப்பதிவு செய்ய, பரணி இசை அமைக்கிறார் என்றார். -

Comments