ஜில்லா’. படத்தில் அரசியல் பஞ்ச் வசனங்களையும், பிறரை தாக்கி பேசும் வசனங்களையும் தயாரிப்பாளரே நீக்கிவிட்டாராம்!!!

3rd of September 2013
சென்னை::சூப்பர் குட் பிலிம்ஸ் சார்பில் ஆர்.பி.சௌத்ரி தயாரித்து வரும் படம் ‘ஜில்லா’. இப்படத்தில் விஜய், காஜல் அகர்வால், மோகன்லால், பூர்ணிமா பாக்யராஜ் உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். இப்படத்தை அறிமுக இயக்குனர் நேசன் இயக்குகிறார்.

தலைவா’ பட பிரச்சினைகளால் கவலையில் இருந்த விஜய் தற்போது, ஜில்லா படப்பிடிப்பில் உற்சாகமாக காணப்படுகிறார். அதற்கு காரணம், இப்படத்தில் விஜய் இதுவரையிலான படங்களில் பார்த்திராத அளவுக்கு மிகவும் அழகான தோற்றத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. முழுக்க முழுக்க மதுரையில் படமாக்கப்பட்டு வருகிறது. இப்போதே ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை இப்படம் ஏற்படுத்தியுள்ளது.

தலைவா’ படத்தைப்போல் இப்படத்திற்கும் பிரச்சினை வந்துவிடக்கூடாது என்பதற்காக முன்னதாகவே, இப்படத்தில் இருந்த அரசியல் பஞ்ச் வசனங்களையும், பிறரை தாக்கி பேசும் வசனங்களையும் தயாரிப்பாளரே நீக்கிவிட்டாராம். இதுபோன்ற வசனங்களை படங்களில் வைக்கக்கூடாது என கறாராகவும் கூறிவிட்டாராம்.

Comments