ஐ யாம் ஆல்ரைட் - விஷால் அறிக்கை!!!

6th of September 2013
சென்னை::விஷாலுக்கு ரத்த அழுத்தம் குறைந்ததால் அவர் சென்னை அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதாக இன்று செய்திகள் வெளியாயின. நமது இணையத்திலும் அது குறித்து எழுதியிருந்தோம். இந்நிலையில் நான் நலமாக இருக்கிறேன் என விஷால் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.
 
ஓய்வில்லாமல் உழைத்ததால் மன உளைச்சலுக்கு ஆளாகி உடல் பரிசோதனைக்காக மருத்துவமனைவிக்கு சென்றதாகவும், மருத்துவர்கள் முழு ஓய்வில் இருக்குமாறு கூறியதாகவும் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார். தற்போது உடம்பில் எந்தப் பிரச்சனையும் இல்லை நலமாக இருக்கிறேன் எனவும் விஷால் தனது அறிக்கையில் கூறியிருக்கிறார்.

Comments