அஜித் நடிக்கும் ஒவ்வொரு படத்திலும் ஒரு பஞ்ச் டயலாக்: சாவுக்கு பயந்தவன் தினம் தினம் சாவான், பயப்படாதவன் ஒரு தடவைதான் சாவான்!!!

23rd of September 2013
சென்னை::அஜித் நடிக்கும் ஒவ்வொரு படத்திலும் ஒரு பஞ்ச் டயலாக் இருக்கும். ‘மங்காத்தா’வில் ‘நானும் எவ்வளவு நாளைக்குதான் நல்லவனா இருக்கிறது’, ‘பில்லா 2’-வில் ‘எனக்கு எதிரியா இருக்கறதுக்கு தகுதி வேணும்’ போன்ற வசனங்கள் ரசிகர்களிடையே பட்டைய கிளப்ப, இதையெல்லாம் மிஞ்சும் விதமாக அமைந்துள்ளது
 
அஜித் நடிப்பில் அடுத்து வரவிருக்கும், ‘ஆரம்பம்’ படத்தில் இடம் பெற்றுள்ள சாவுக்கு பயந்தவன் தினம் தினம் சாவான், பயப்படாதவன் ஒரு தடவைதான் சாவான்’ என்ற பஞ்ச் டயலாக்! இந்தப் படத்தின் டிரைலர் இன்று வெளியாகி தூள் கிளப்பிக் கொண்டிருக்க,
 
அஜித்தின் இந்த பஞ்ச் வசனமும் பட்டையை கிளப்பும் என்பதில் சந்தேமில்லை! இந்த தீபாவளி 'தல' தீபாவளி தான்.

Comments