தனுஷை மானசீக குருவாக பார்க்கும் சிவகார்த்திகேயன்!!!

23rd of September 2013
சென்னை::பாண்டிராஜ் இயக்கிய ‘மெரினா’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் சிவகார்த்திகேயன்.
 
தொடர்ந்து ‘மனம் கொத்திப் பறவை’, ‘எதிர்நீச்சல்’, ‘கேடிபில்லா கில்லாடி ரங்கா’, ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ என வரிசையாக நடித்தார். யாருடைய ஆதரவும் இல்லாமல் சொந்த முயற்சியால் வந்த சிவகார்த்திகேயனுக்கு 3 படத்தில் நடித்தபோது தனுஷுடைய நட்பு கிடைத்தது.
 
என் தம்பி சிவகார்த்திகேயன் என்று தனுஷ் பெருமையாக சொல்லிக்கொள்ளும் அளவுக்கு இவர்களது நட்பு வளர்ந்தது. அதோடு நில்லாமல் தன் தயாரிப்பில் உருவான ‘எதிர்நீச்சல்’ படத்தில் சிவகார்த்திகேயனை ஹீரோவாக்கினார் தனுஷ்.
 
அதுமுதல் தனுஷை தன் மானசீக குருவாகவே பார்க்கிறார் சிவகார்த்திகேயன். இப்போது படத்தின் கதை, சம்பளம் உட்பட சினிமா விஷயங்கள் குறித்து தனுஷிடம்தான் ஆலோசனையைக் கேட்கிறார். தனுஷ் சொல்லாமல் எந்தப் படத்திலும் சிவகார்த்திகேயன் கமிட் ஆவதில்லையாம். மேலும் சம்பளம்கூட தனுஷ் அறிவுரைப்படிதான் கேட்கிறாராம்.

Comments