அடுத்த மாதம் அரண்மனையில் ஹன்சிகா!!!

10th of September 2013
சென்னை::சுந்தர் சி. இயக்கும் புதிய படமான அரண்மனையில் மூன்றில் ஒரு நாயகியாக ஹன்சிகா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அரண்மனையின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்குகிறது

தீயா வேலை செய்யணும் குமாருக்குப் பிறகு அரண்மனை என்ற படத்தை சுந்தர் சி. இயக்குகிறார். இந்தப் படத்தை அவரே இயக்கி நடிக்கிறார் எனவும் கூறப்பட்டது. சந்திரமுகி போன்று ஆவி படமான அதில் மூன்று நாயகிகள்.
 
லட்சுமிராய், ஆண்ட்ரியா, ஹன்சிகா. அதில் ஹன்சிகா நடிப்பது மட்டும் உறுதி செய்யப்படாமல் இருந்தது. தனது ட்விட்டர் செய்தியின் மூலம், அரண்மனையில் நடிப்பதை ஹன்சிகா உறுதி செய்துள்ளார்.
 
இந்தப் படத்தில் வினய் முக்கியமான வேடத்தில் நடிக்கிறார். அடுத்த மாதம் படப்பிடிப்பு தொடங்குகிறது.

 ஹன்சிகா, ஹாட், அரண்மனை,

Comments