சலசலப்பை ஏற்படுத்திய நடிகையின் ஆடை நழுவல் விவகாரம்!!!

18th of September 2013
சென்னை::கன்னட சினிமாவில் முன்னணி நடிகைகளுள் ராகினியும் ஒருவர். இவருக்கு சிவா என்ற கன்னட படத்தில் நடித்தமைக்காக சிறந்த நடிகைக்கான விமர்சகர் விருது துபாயில் நடைபெற்ற விழாவில் வழங்கப்பட்டது. அந்த விருதினை வாங்குவதற்காக சென்றிருந்த ராகினி, ஒரு பாடலுக்கு மேடையில் தோன்றி கவர்ச்சி நடனம் ஆடினாராம்.

இசைக்கேற்ப அவர் மெய்மறந்து ஆடிக்கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக அவர் அணிந்திருந்த ஸ்கர்ட் அவரது உடம்பில் இருந்து நழுவி கீழே விழுந்ததாம். இதனால் ராகினியின் உள்ளாடை வெளியே தெரிய, ஆட்டத்தை கண்டுகளித்துக்கொண்டிருந்த துபாய் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தார்களாம்.

இதையறிந்த விழாக்குழுவினர், உடனடியாக மேடையில் உள்ள மின் விளக்குகளை ஆப் செய்து. ராகினிக்கு விஷயத்தை தெரியப்படுத்தினார்களாம்.

அதையடுத்து உடனடியாக ஆடையை சரி செய்து கொண்ட ராகினி, மீண்டும் அதே வேகத்தில் ஆடத் தொடங்கினாராம். என்றாலும், அந்த நிகழ்ச்சி முடிகிற வரை ராகினியின் ஆடை நழுவிய விவகாரம் அரங்கை சலசலப்பாக்கிக்கொண்டேயிருந்ததாம்.

Comments