நான் கடவுளே இல்லன்னு சொல்லிக்கிட்டிருக்கேன். நீங்க என்னேயே கடவுளுங்கிறீங்களா: கமல்!!!

17th of September 2013
சென்னை::கடவுள் நமபிக்கை, நல்ல நேரம், கெட்ட நேரம் போன்றவை நிறைந்தது சினிமா உலகம். படத்திற்கு பூஜை போடுவதில் இருந்து, படப்பிடிப்பு தொடங்கி கடைசியில் பூசணிக்காய் உடைக்கிறது வரைக்கும் இதையெல்லாம் சரியாக கடைபிடிப்பார்கள். ஆனால், அப்படிப்பட்ட சினிமாவில் இது எதையும் பார்க்காமல் தனது திறமை, முயற்சி, உழைப்பு இவற்றையே மூலதனமாகக்கொண்டு இன்று வரை வெற்றி மேல் வெற்றி பெற்று வருகிறார் கமல். குறிப்பாக கடவுள் நம்பிக்கை இல்லாதவர்.

ஆனால், அப்படிப்பட்ட கமல், ரீ ரிலிசாகும் நினைத்தாலே இனிக்கும் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவுக்கு வந்திருந்தபோது., அவரது ரசிகர்களும் பெருந்திரளாக கூடியிருந்தனர். கமலின் பெயரை மேடையில் பேசுவோர் உச்சரிக்கும்போதெல்லாம் கைதட்டி ஆரவாரம் செய்தனர். இந்த நேரத்தில் சிலர், ஆழ்வார்பேட்டை ஆண்டவா என்றும் அவ்வப்போது குரல் கொடுத்தனர்.

இதை மேடையில் அமர்ந்திருக்கும்போது கேட்ட கமல் அவ்வப்போது ரசிகர்களை மெளனமாக இருக்

இதனால், ரசிகர்களைப்பார்த்து, நான் கடவுளே இல்லன்னு சொல்லிக்கிட்டிருக்கேன். நீங்க என்னேயே கடவுளுங்கிறீங்களா என்று ரசிகர்களைப்பார்த்து லேசாக சிரித்தபடி சொல்ல, அதோடு ஆப்பாகி விட்டனர். அதன்பிறகு அந்த ஆழ்வார்பேட்டை ஆண்டவா சத்தம் அரங்கில் ஒலிக்கவேயில்லை..
குமாறு கைசைகையில் கேட்டுக்கொண்டு வந்தார். ஆனால், அந்த ஆழ்வார்பேட்டை ஆண்டவா மட்டும் ரசிகர் கூட்டத்தில் இருந்து ஒலித்துக்கொண்டேயிருந்தது. அதுவும் கமல் மைக் முன்னே பேச வரும்போது இன்னும் வேகமாக ஒலித்தது.
 
கமலும், ரஜினியும் ஆரம்ப காலத்தில், பல படங்களில் இணைந்து நடித்தனர். அப்படி, பாலசந்தர் இயக்கத்தில், அவர்கள் நடித்த படங்களில் ஒன்றான, நினைத்தாலே இனிக்கும்’ படம், 34 ஆண்டுகளுக்கு பின், டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன், மீண்டும் திரைக்கு வருகிறது.இப்படத்தின், ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட கமல், தன் பழைய நினைவுகளையும் அசைபோட்டார்.

அப்போது, நானும், ரஜினியும் இணைந்து நடித்த பெரும்பாலான படங்கள் ஹிட்டுதான். அதில் இந்த, ‘நினைத்தாலே இனிக்கும்’ படம் இன்று வரை, மனதில் இனித்துக் கொண்டிருக்கிறது. இந்த படத்திற்கு பின் தான், நாங்கள் தனித்தனியாக பிரிந்து நடிக்கவும் முடிவு செய்தோம். ஆன போதும், இன்று வரை நானும், ரஜினியும் சகோதரர்களாக தான் இருக்கிறோம். என்னால் செல்ல முடியாத விழாக்களுக்கு, என் சார்பில் ரஜினி செல்கிறார். அவரால் செல்ல ‌முடியாத விழாக்களுக்கு, நான் சென்று வருகிறேன். இந்த படத்தின் விழாவுக்கு கூட ரஜினிக்காகவும், நான் வந்திருக்கிறேன்’ என்கிறார் கமல்.

Comments