மேக்–அப் இல்லாவிட்டாலும் நான் அழகு தான்’ விமர்சனங்களுக்கு ரிச்சா பதிலடி!!!

24th of September 2013
சென்னை::மயக்கம் என்ன’ படத்தின் மூலம், தமிழுக்கு அறிமுகமான, ரிச்சாவுக்கு, இப்போது தமிழில் சுத்தமாக வாய்ப்பு இல்லை. இதனால், தெலுங்கு, இந்தி படங்களில் நடிக்க வாய்ப்பு தேடி வருகிறார். ‘ரிச்சா போன்ற நடிகைகள், மேக்அப் போடுவதால் தான், அழகாக இருக்கின்றனர்’ என்பது போன்ற செய்திகள்,   வெளியானதால், கடும் டென்ஷனானார், ரிச்சா.
 
மேக்அப் இல்லாமல் எடுக்கப்பட்ட, தன்னுடைய புகைப்படத்தை, டுவிட்டரில்  வெளியிட்டு, ‘மேக்அப் இல்லாவிட்டாலும், நான் அழகு தான்’ என, குறிப்பிட்டு, தன்னை விமர்சித்தவர்களின் வாயை அடைத்துள்ளார். ‘ஆரோக்கியமான உணவு, நல்ல  துாக்கமும் இருந்தால், யாருமே அழகாக இருக்கத் தான் செய்வார்கள். அடிக்கடி ஜூஸ் குடிப்பதன் மூலமும், முறையான உடற்பயிற்சி செய்வதன் மூலமும், உடலை கட்டுக் கோப்பாக வைத்துக் கொள்ளலாம்’ என்றும், அழகு டிப்ஸ் கொடுத்துள்ளார்.

Comments