ஹன்சிகா பக்கத்துல நின்னதுனால பளிச்சின்னு ஆயிட்டேன்! சிவகார்த்திகேயன்!!!

26th of September 2013
சென்னை::சினிமாவில் எதிர்நீச்சல் போட்டு வரும் சிவகார்த்திகேயன், குறுகிய காலத்திலேயே பேசப்படும் நடிகராகி விட்டார். எந்தவித சப்போட்டும் இல்லாமல் தனது சொந்த முயற்சியில் சினமாவுக்கு வந்து வெற்றி பெற்றிருககும் அவர், தற்போது கோடம்பாக்கத்தின் நம்பிக்கை நட்சத்திரமாகி விட்டார். அதனால் முன்னணி பட நிறுவனங்களே அவரை வைத்து படம் பண்ண காத்திருக்கின்றன.

அந்த வகையில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்துக்குப்பிறகு அவரது மார்க்கெட் எங்கேயோ போய்விட்டது. தற்போது கோலிவுட்டின் முன்னணி நடிகையான ஹன்சிகாவுடனும் மான்கராத்தே படத்துக்காக நடித்துக்கொண்டிருக்கிறார். இதனால் சிவகார்த்திகேயனின் லெவல் பலபடி உயர்ந்து நிற்கிறது.

அதோடு, தனது ரேஞ்சை இன்னும் உயர்த்திக்கொள்ளும் வகையில் இந்த படத்தில் அதிக ஈடுபாட்டுடன் நடித்து வரும் சிவகார்த்திகேயன், ஹன்சிகாவுடனான காட்சிகளில் அதிக ஈடுபாடு காட்டுகிறாராம். அப்படி அவருடன் நடித்து முடித்த காட்சிகளை பின்னர் மானிட்டரில் பார்த்து வியந்து நிற்கிறாராம். ஹன்சிகா பக்கத்துல நின்னதுனால ரொம்ப பளிச்சின்னு ஆயிட்டேன். இவ்ளோ ப்ரைட்னஸா இதுவரை எந்த படத்திலும் என்னை நான் பார்த்ததே இல்லை என்று சொல்லி சிலிர்த்துப்போகிறாராம்.

ஆக, வருத்தப்படாத வாலிபர் சங்கம படத்துல நடிக்கிறப்போ அப்படத்தோட இசையமைப்பாளர் இமான், தம்பி ரொம்ப அழகா ஆயிட்டே போறேன்னு சொன்னாரு. ஆனா இந்த படத்த பார்த்தாருன்னா என் அழகுல மயங்கியே போயிடுவாரு அண்ணன் என்கிறாராம் சிவகார்த்திகேயன்.

Comments