சுந்தர் சி. படத்தில் ஆண்ட்ரியா...?!!!

6th of September 2013
சென்னை::ஆண்ட்‌ரியாவுக்கு தமிழில் சில புதிய வாய்ப்புகள் கிடைத்திருக்கிறது. முக்கியமாக ராமின் தரமணி. அதில் ஆண்ட்ரியாதான் நாயகி.
 
சந்தர் சி. அடுத்து இயக்கும் அரண்மனை படத்தில் மூன்று ஹீரோயின்களில் ஒருவர் ஆண்ட்ரியா என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
 
முரட்டுகாளை படத்துக்குப் பிறகு தமிழக மக்களின் பிரார்த்தனை காரணமாக நடிப்புக்கு முழுக்குப் போட்ட சுந்தர் சி. அரண்மனை படத்தின் மூலம் மீண்டும் நடிப்புக்கு திரும்புவதாக ஒரு அதிர்ச்சி தகவல் உலவுகிறது. அதேநேரம், சுந்தர் சி. நடிக்கவில்லை, ஆர்யாதான் நடிக்கிறார் என குளிர்ச்சி தகவலையும் சொல்கிறார்கள்.
 
சந்திரமுகி மாதிரி இதுவொரு ஹாரர் காமெடி படம்.மொத்தம் மூன்று நாயகிகள். அதில் இரண்டு பேர்
ஹன்சிகா மற்றும் ஆண்ட்ரியா. மூன்றாவது நாயகியை இன்னும் முடிவு செய்யவில்லையாம்.
 
அரண்மனை குறித்த தகவல்கள் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாக கசிகிற தகவல்கள் ஆவி படத்தை மாதிரி அதிர்ச்சியாகதான் இருக்கிறது.

Comments