ஜெயம் ரவி தவறி விழுந்தார் - கை எலும்பு முறிந்தது!!!

3rd of September 2013
சென்னை::ஜெயம் ரவி தவறி விழுந்தார் - கை எலும்பு முறிந்தது இதுதான் நேரம்ங்கிறது. பூலோகம் படத்தில் அதிரடியான சண்டைக் காட்சிகளில் நடித்த போது எந்த‌க் காயமும் இன்றி தப்பித்த ஜெயம் ரவி, வீட்டில் தவறி விழுந்து கையை முறித்துக் கொண்டிருக்கிறார்.
 
பூலோகம் படத்தில் வடசென்னையைச் சேர்ந்த பாக்ஸராக நடிக்கிறார் ஜெயம் ரவி. ஹாலிவுட்டின் ஏழரையடி உயர நடிகருடன் இவர் மோதும் கிளைமாக்ஸ் காட்சியை சமீபத்தில்தான் படமாக்கினர். ஆஸ்கர் ஃபிலிம்ஸின் பூலோகம் ஆக்சனில் கலக்கும் என்கிறது படயூனிட்.
 
பூலோகத்துடன் சமுத்திரக்கனியின் நிமிர்ந்து நில் படத்திலும் ஜெயம் ரவிதான் ஹீரோ. தமிழ், தெலுங்கில் தயாராகும் இப்படத்தின் தெலுங்கு பதிப்பின் நாயகன் நானி. படப்பிடிப்பு ஜரூராக நடந்து வரும் நிலையில் எதிர்பாராமல் வீட்டில் தவறி விழுந்து கையை முறித்துக் கொண்டிருக்கிறார்.
இதன் காரணமாக படப்பிடிப்பு தற்காலிகமாக தடைபட்டிருக்கிறது.

Comments