ஜீவன் நடிக்கும் ‘வென்று வா!!!

4th of September 2013
சென்னை::காக்க காக்க’, ‘திருட்டுப்பயலே’ போன்ற பல படங்கள் மூலம் பரபரப்பாக பேசப்பட்டவர் நடிகர் ஜீவன். கடைசியாக இவர் நான் அவனில்லை 2 படத்தில் நடித்திருந்தார்.
அதன் பிறகு ஜீவன் வேறு எந்தப் படத்திலும் நடிக்கவில்லை. இந்நிலையில் அவர் நீண்ட இடைவெளியைத் தொடர்ந்து ‘வென்று வா’ என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். அவருக்கு ஜோடியாக நடிகை ஜெயமாலாவின் மகள் சௌந்தர்யா நடிக்க இருக்கிறார்.

ஜீவன் நடித்த ‘நான் அவனில்லை’ படத்தை இயக்கிய செல்வாவே இந்தப் படத்தையும் இயக்குகிறார். படத்தை விஷ்வாஸ் சுந்தரின் ‘சன் மூன் பிக்சர்ஸ்’ நிறுவனம் தயாரிக்கிறது. படத்துக்கு விஜய் என்ற புதுமுக இசையமைப்பாளர் இசையமைக்க உள்ளார்.

கதைப்படி, எந்த வம்பு தும்புக்கும் போகாத இளைஞர் ஜீவன். ஒரு சமயத்தில் இவர் ஒரு பிரச்சனியில் சிக்கி, பெரிய சதித்திட்டத்தில் மாட்டி கொள்கிறார். அதிலிருந்து எப்படி தப்பிக்கிறார் என்பதை விறுவிறுப்பாகச் சொல்லும் படமாம் ’வென்று வா’. படப்பிடிப்பு விரைவில் சென்னையில் துவங்கி புதுச்சேரி, ஹைதராபாத் மற்றும் வெளிநாடுகளில் நடக்க இருக்கிறது.
 
tamil matrimony_INNER_468x60.gif

Comments