இந்திய சினிமா நூற்றாண்டு திரைப்பட விழாவில் இன்று!!! நாளை முதல் சினிமா படப்பிடிப்பு 7 நாட்கள் ரத்து: நடிகர், நடிகைகள் நடன ஒத்திகை!!!

17th of September 2013
சென்னை::இந்திய சினிமா நூற்றாண்டு திரைப்பட விழாவில் செவ்வாய்க்கிழமை  "சிரித்து வாழ வேண்டும்', "செம்மீன்' (மலையாளம்) உள்ளிட்ட 4 படங்கள் திரையிடப்படுகின்றன. 
 
இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழா கொண்டாட்டம் சென்னையில் 21-ஆம் தேதி முதல் 24-ஆம் தேதி வரை நடக்கிறது. இந்த கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக தென்னிந்திய சினிமாவில் திருப்புமுனையாக அமைந்த திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன.
 
ஆயிரத்தில் ஒருவன்' (தமிழ்), "மகதீரா' (தெலுங்கு), "பங்காரத மனுஷ்ய' (கன்னடம்), "பாசமலர்' (தமிழ்) ஆகிய படங்கள் திங்கள்கிழமை திரையிடப்பட்டன.
 
செவ்வாய்க்கிழமை (செப்.17) திரையிடப்படும் படங்கள்:
சத்யம் திரையரங்கம், காலை 11.30 மணி: கர்ணன் (தமிழ்)
அபிராமி திரையரங்கம், மாலை 6.30 மணி: நாடோடி மன்னன் (தமிழ்)
உட்லண்ட்ஸ் திரையரங்கம், காலை 11.30 மணி: சிரித்து வாழ வேண்டும் (தமிழ்)

4 ஃப்ரேம்ஸ் திரையரங்கம், முற்பகம் 12.00 மணி: செம்மீன் (மலையாளம்)
 
நாளை முதல் சினிமா படப்பிடிப்பு 7 நாட்கள் ரத்து: நடிகர், நடிகைகள் நடன ஒத்திகை!!!
 
 இந்திய சினிமா நூற்றாண்டு விழா வருகிற 21–ந்தேதி முதல் 24–ந்தேதி வரை சென்னையில் கொண்டாடப்படுகிறது. இவ்விழாவை முதல் அமைச்சர் ஜெயலலிதா துவக்கி வைக்கிறார். நிறைவு விழாவில் ஜனாதிபதி பிரணாப்முகர்ஜி பங்கேற்கிறார்.

நூற்றாண்டு விழாவையொட்டி 21–ந்தேதி மாலை 5.30 மணிக்கு தமிழ், நடிகர், நடிகைகள் கலை நிகழ்ச்சியும் 22–ந்தேதி காலை கன்னட நடிகர், நடிகையர் கலை நிகழ்ச்சியும் 22–ந்தேதி மாலை தெலுங்கு நடிகர், நடிகையர் கலை நிகழ்ச்சியும் 23–ந்தேதி காலை மலையாள சினிமா உலகினர் கலை நிகழ்ச்சியும் நடக்கின்றன.

நயன்தாரா, திரிஷா, ஸ்ரேயா, காஜல்அகர்வால், ஹன்சிகா, அனுஷ்கா, தமன்னா, சமந்தா உள்ளிட்ட முன்னணி நடிகைகள் நடனம் ஆடுகின்றனர்.

நூற்றாண்டு விழாவை யொட்டி சினிமா படப்பிடிப்புகள் நாளை முதல் 24–ந் தேதி வரை 7 நாட்கள் ரத்து செய்யப்படுகிறது. வெளியூர் படப்பிடிப்புகளில் இருக்கும் நடிகர் நடிகைகள் இன்று இரவே சென்னை திரும்புகிறார்கள்.

Comments