கிளிப்பிங்ஸ்!!!கிளிப்பிங்ஸ்!!!கிளிப்பிங்ஸ்!!!

26th of August 2013
சென்னை::ஏலம் விடும் சமந்தா ஏழை, எளியவர்களுக்கு உதவும் நோக்குடன் பிரதுஷா என்ற சமூக நல அறக்கட்டளையை டாக்டர்கள் சிலருடன் இணைந்து தொடங்கினார் சமந்தா. இதற்கு நிதி திரட்டுவதற்காக படங்களில் தான் அணிந்து நடித்த உடைகளை ஏலம் விட்டார். அவருக்கு டோலிவுட் ஹீரோக்கள் கைகொடுத்திருக்கின்றனர். ஹீரோ பவன் கல்யாண், தான் அணிந்து நடித்த போலீஸ் யூனிபார்மை அறக்கட்டளைக்கு வழங்கினார். நடிகர் மகேஷ்பாபு ‘டூகுடு’ படத்தில் அணிந்து நடித்த உடைகளை வழங்கி இருக்கிறாராம். ஆனால் சமந்தாவுக்கு இன்னும் கோலிவுட் ஸ்டார்கள் யாரும் உதவிக்கரம் நீட்டவில்லையாம்.
 
கைப்புள்ள சங்கம்

எம்.ராஜேஷ் உதவியாளர் பொன்ராம் இயக்கும் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்துக்கு தணிக்கை குழு ‘யு’ சான்றிதழ் வழங்கியுள்ளது. சிவகார்த்திகேயன், சத்யராஜ். ஸ்ரீதிவ்யா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ‘வின்னர்’ படத்தில் ‘கைப்புள்ள’ வடிவேலு நடத்தும் சங்கத்தின் பெயர் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’. அதுதான் இப்படத்தின் டைட்டிலாக வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் கவுரவ வேடத்தில் நடிக்க ‘கைப்புள்ள’யிடம் கேட்டனர். ஆனால் அவர் மறுத்துவிட்டாராம்.

நடிகர்கள் மாற்றம்

‘பேராண்மை’ இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் அடுத்து இயக்கும் படத்துக்கு ‘புறம்போக்கு’ என பெயரிட்டுள்ளார். பயன்படுத்தாமல் உள்ள நிலத்தை குறிக்கும் இந்த வார்த்தையை, சிலர் திட்டுவதற்கும் பயன்படுத்துகின்றனர். இப்படத்தில் முதலில் ஜெயம் ரவி, ஜீவா நடிப்பதாக இருந்தது. தற்போது அவர்களுக்கு பதிலாக ஆர்யா, விஜய் சேதுபதி நடிக்கின்றனர்.

குழப்பத்தில் சிரஞ்சீவி

டோலிவுட் சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி, நடிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டு அரசியலில் குதித்தார். தொடங்கிய புது கட்சியை காங்கிரசில் இணைத்துவிட்டு, மத்திய அமைச்சராகிவிட்டார். அவர் தனது 58&வது பிறந்தநாளை கடந்த செவ்வாய்கிழமை கொண்டாடினார். 150&வது படத்தில் அவர் நடிக்க வேண்டும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. அமைச்சராகிவிட்டதால் அது இன்னும் நிறைவேறவில்லை. எங்களுக்காக கொஞ்சம் நேரம் ஒதுக்கி, 150&வது படத்தில் நடிக்க வேண்டும் என்று ரசிகர்கள் பலர் அவருக்கு கடிதம் எழுதியுள்ளார்களாம். இதனால் குழப்பத்தில் இருக்கிறார் சிரஞ்சீவி.

ளையை டாக்டர்கள் சிலருடன் இணைந்து தொடங்கினார் சமந்தா. இதற்கு நிதி திரட்டுவதற்காக படங்களில் தான் அணிந்து நடித்த உடைகளை ஏலம் விட்டார். அவருக்கு டோலிவுட் ஹீரோக்கள் கைகொடுத்திருக்கின்றனர். ஹீரோ பவன் கல்யாண், தான் அணிந்து நடித்த போலீஸ் யூனிபார்மை அறக்கட்டளைக்கு வழங்கினார். நடிகர் மகேஷ்பாபு ‘டூகுடு’ படத்தில் அணிந்து நடித்த உடைகளை வழங்கி இருக்கிறாராம். ஆனால் சமந்தாவுக்கு இன்னும் கோலிவுட் ஸ்டார்கள் யாரும் உதவிக்கரம் நீட்டவில்லையாம்.
 
டபுள் நயன்
‘ஜெயம் பட வில்லன் கோபி சந்த்வுடன் நயன்தாரா நடிக்க தமிழ், தெலுங்கு என டபுள் லாங்குவேஜ் படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்க உள்ளது. இது தவிர ஏற்கனவே ஒப்புக்கொண்ட இருமொழி படங்களின் ஷூட்டிங்கில் பிஸியாக இருப்பதால் மற்ற எந்த பிரச்னையும் நயனின் கவனத்தை ஈர்க்கவில்லையாம்.  நயனுடன் நடிக்கும் கோபிசந்த் முதன்முறையாக அவரது கதாபாத்திரத்துக்கு அவரே தமிழில் டப்பிங் பேசுகிறார்.

விஷால் ரிலீஸ்

சுந்தர்.சி. இயக்கத்தில் விஷால், அஞ்சலி, வரலட்சுமி நடித்துள்ள படம் ‘மத கஜ ராஜா. இப்படத்தின் ரிலீஸ் ஒன்றிரண்டு முறை தள்ளிப்போனது. தற்போது படத்தை விஷால் ரிலீஸ் செய்ய உள்ளாராம். விஜய் ஆண்டனி இசை அமைத்திருக்கும் இப்படத்தில் அவர் கேட்டுக்கொண்டதற்கு இணங்க சொந்த குரலில் ஒரு பாடல் பாடி இருக்கிறார் விஷால். இது இவர் பாடகராக அறிமுகமாகும் முதல் படம்.

வியந்த வாரிசு

‘அக்னி நட்சத்திரம் இரட்டை ஹீரோக்கள் பிரபு, கார்த்திக் வாரிசுகளும் ஹீரோவாகி விட்டனர். இரட்டையர்களில் கார்த்திக் இன்னும் ஓய்விலேயே இருக்கிறார். பிரபுவோ தமிழ், தெலுங்கு என குணச்சித்ர வேடங்களில் வலம் வந்துக்கொண்டிருக்கிறார். ‘அல மாடலயிந்தி தெலுங்கு படத்தில் கார்த்திக் வாரிசு கவுதமுடன் நடிக்கிறார் பிரபு. இந்த அனுபவம் பற்றி தனது டுவிட்டர் பக்கத்தில் வியந்திருக்கிறார் கவுதம். 5 நாட்கள் பிரபு அங்கிளுடன் இணைந்து நடித்தாராம். அரங்கிற்குள் அவர் கொண்டு வந்த எனர்ஜி கவுதமை உற்சாகத்தில் ஆழ்த்தியதாம்.

சூர்யா பாட்டு

டாப் ஹீரோக்கள் சொந்த குரலில் பாடி வருகின்றனர். அந்த வரிசையில் சூர்யாவும் சேர்கிறார். ஆனால் படத்துக்காக பாடவில்லை. விளம்பர படத்துக்காக பாடினார். பாடகர் கார்த்திக் இசை அமைத்தார். ராஜீவ் மேனன் இயக்கினார்.
 
சுதீப்புக்கு டிமான்ட்
 
நான் ஈ’ படத்துக்கு பிறகு வில்லன் நடிகர் சுதீப்புக்கு டிமான்ட் எகிறிவிட்டது. ஆனால், கன்னடத்தில் அவர் ஹீரோவாக வலம் வந்து கொண்டிருக்கிறார். கோலிவுட்டில் விஜய், அஜீத் போன்ற முன்னணி ஹீரோக்களை இயக்கிய பேரரசு, விரைவில் சுதீப் ஹீரோவாக நடிக்கும் படத்தை இயக்க பேச்சு நடக்கிறதாம். தற்போது ‘திகார்’ என்ற படத்தை பேரரசு இயக்கி வருகிறார். மலையாளத்தில் இப்படத்துக்கு ‘சாம்ராஜ்யம்&2 சன் ஆப் அலெக்ஸாண்டர்’ என பெயரிடப்பட்டிருக்கிறது.
 
ஜான்வி கபூருக்கு 15 வயது
 
தனியாக வந்த வாரிசு ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூருக்கு 15 வயது ஆகிறது. இதுவரை அம்மா ஸ்ரீதேவி, அப்பா போனிகபூருடன் மட்டுமே திரைப்பட விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு வந்து கொண்டிருந்தார். முதல்முறையாக மும்பையில் நடந்த சங்கல்ப் ரிஹபலிடேஷன் அறக்கட்டளை நிகழ்ச்சிக்கு ஜீன்ஸ், டாப்ஸ் அணிந்து தோழிகளுடன் வந்திருந்தார். தெரிந்த முகங்கள் நிறையபேர் நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்ததால் எந்த டென்ஷனும் இல்லாமல் ரிலாக்ஸாக இருந்தாராம் ஜான்வி
 
அதிரடி இல்லை
 
அதிரடி இல்லை‘ஜில்லா’ படத்தில் நடித்து வரும் விஜய், அடுத்ததாக ‘துப்பாக்கி’ பட டீமுடன் மீண்டும் இணைகிறார். ஹீரோயினாக நடிக்க சமந்தாவுடன் பேச்சு நடக்கிறது. புதிய படத்துக்கு ‘அதிரடி’ என பெயரிட்டிருப்பதாக கோலிவுட்டில் பேசப்படுகிறது. ஆனால், விஜய்யிடம் கேட்டால், ‘‘முருகதாஸ் படத்தில் நடிக்கப்போவது நிஜம். ஆனால் டைட்டில் ‘அதிரடி’ இல்லை’’ என்கிறாராம்.

Comments