நிமிர்ந்து நில் படத்தை எதிர்பார்க்கும் அமலா பால்!!!

19th of August 2013
சென்னை::மலையாள, தெலுங்கு படங்கள் இருந்தாலும், கோலிவுட்டையே பெரிதும் நம்பியிருந்தார் அமலாபால். "வேட்டை' வெளியாகி ஒரு வருடத்துக்கு மேலாகியும், அடுத்தடுத்து படங்கள் வெளிவராமல் அப்படியே நிற்கிறது. 

ஹீரோ ஜெயம் ரவியின் கெட்டப் மாற்றத்தால் "நிமிர்ந்து நில்' பட ஷூட்டிங் 40 சதவீதத்தோடு நிற்கிறது. சிக்கல்களில் சிக்கி தவிக்கிறது "தலைவா'. இதனால் அமலாபால் அப்செட். இதற்கிடையே தெலுங்கில் நாக சைதன்யா ஜோடியாக நடித்த "பெஜவாடு', தமிழில் "விக்ரம் தாதா' என்ற பெயரில் வெளியாக இருக்கிறது. இடைவெளி குறித்து கருத்து தெரிவிக்கையில், ""முப்பொழுதும் உன் கற்பனைகள்', "வேட்டை', "காதலில் சொதப்புவது எப்படி' என ஒரே நேரத்தில் அடுத்தடுத்து  படங்கள்.

அதன் பின் சரும பாதுகாப்பு சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றிருந்தேன். அந்த இடைவெளியால்தான் படங்கள் இல்லை. இருந்தாலும் "தலைவா', "நிமிர்ந்து நில்' இரு படங்களுமே இன்னும் பெரிய உயரங்களுக்கு கொண்டு போகும்'' என்கிறார் அமலாபால்.

Comments