நடிப்புக்கு முழுக்குப் போட முடிவு செய்துள்ள திவ்யா!!!

26th of August 2013
சென்னை::குத்து படத்தின் மூலம், தமிழுக்கு அறிமுகமான, ரம்யாவுக்கு, அதற்கு பின் போதிய வாய்ப்புகள் கிடைக்காததால், தன் பெயரை, திவ்யா ஸ்பந்தனா என மாற்றிக் கொண்டார். இதைத் தொடர்ந்து, 'பொல்லாதவன்', 'சிங்கம் புலி', 'வாரணமாயிரம்' ஆகிய படங்களில் நடித்தார். ஆனாலும், நடிப்பை விட இவருக்கு அரசியலில் தான் ஆர்வம் அதிகம்.

கர்நாடகாவைச் சேர்ந்த திவ்யா, காங்கிரஸ் குடும்பத்தை சேர்ந்தவர். சமீபத்தில் கர்நாடகாவில் நடந்த லோக்சபா இடைத்தேர்தலில்  காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.  அவர் கூறுகையில், "இனிமேல் அரசியலுக்குத்தான் முழுநேரத்தையும் ஒதுக்குவதென முடிவு செய்து விட்டேன். இதனால், புதிதாக எந்த படத்திலும் நடிக்க சம்மதிக்கவில்லை. எனக்கு முன், அரசியலில் பல பெண்கள், சாதித்துள்ளனர். நானும் சாதிப்பேன் என்ற நம்பிக்கையுள்ளது." என்று தெரிவித்துள்ளார்.

திவ்யாவின் இந்த அதிரடி ஸ்டேட்மென்டால், அவர் நடிப்புக்கு முழுக்கு போடுவது உறுதியாகி விட்டதால், அவரின் கன்னட ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர்.
 

Comments