'நண்பேன்டா' படத்துக்காக மீண்டும் கைகோர்க்கும் உதயநிதி, சந்தானம் கூட்டணி!!!

4th of July 2013
சென்னை::ஒரு கல் ஒரு கண்ணாடி, இது கதிர்வேலன் காதல், ஆகிய படங்களைத் தொடர்ந்து உதயநிதி, சந்தானம் கூட்டணி மூன்றாவது முறையாக இணையும் படம் நண்பேண்டா.
 
இப்படத்தை அறிமுக இயக்குனர் ஜெகதீஷ் இயக்குகிறார். இவர் இயக்குனர் ராஜேஷிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்து வருகிறார். அதோடு தற்போது ராஜேஷ் இயக்கி வரும் 'ஆல் இன் ஆல் அழகுராஜா' படத்திலும் உதவி இயக்குனராக உள்ளார்.
 
படத்திற்கு 'நண்பேன்டா' என்று தலைப்பிட்டு இருக்கிறார்கள். இப்படத்திலும் உதயநிதி நண்பனாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் சந்தானம். ஒரு கல் ஒரு கண்ணாடி, இது கதிர்வேலன் காதல், ஆகிய படங்களைத் தொடர்ந்து உதயநிதி, சந்தானம் கூட்டணி அமைக்கும் மூன்றாவது படம் இது.
 
படம் முழுவதும் இருவரும் இணைந்து வருவது போன்றே காட்சிகள் இருப்பதால் சந்தானத்திடம் மொத்தமாக கால்ஷீட் கேட்டு இருக்கிறார்கள். நாயகியாக நடிக்க முன்னணி நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இப்படத்தினையும் உதயநிதியின் ரெட் ஜெயிண்ட் நிறுவனமே தயாரிக்க இருக்கிறது.

Comments