காதலும் இல்லை, திருமணமும் இல்லை - சாந்தனு விளக்கம்!!!

29th of July 2013
சென்னை::இயக்குநர் மற்றும் நடிகருமான பாக்யராஜின் மகன் சாந்தனு. 'சக்கரக்கட்டி' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமான இவர் அதற்கு பிறகு 'சித்து பிளஸ் டூ', 'ஆயிரம் விளக்கு' உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.

மேலும் சில, படங்களில் நடித்து வரும் சித்துவுக்கும், கலைஞர் டிவியில் 'மானாட மயிலாட' நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் கீர்த்தியும் காதலிப்பதாகவும், இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ளப் போவதாகவும் செய்திகள் வெளியாயின.

இதை மறுத்துள்ள சாந்தனு, இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து கூறிய சாந்தனு, "காதல் என்பதெல்லாம் இல்லை. நானும், கீர்த்தியும் நல்ல நண்பர்கள். எங்களைப் பற்றி வந்த செய்திகள் அனைத்தும் தவறானவை.

இப்போது என் முழு கவனமும் சினிமாவில் தான் உள்ளது.  தற்போது 'வாய்மை', 'அமளிதுமளி' ஆகியப் படங்களில் நடித்து வருகிறேன். இன்னும் பல படங்களில் நடித்து சினிமாவில் ஒரு நல்ல இடத்தை அடைய விரும்புகிறேன். அதன் பிறகே திருமணத்தைப் பற்றி யோசிப்பேன்." என்று தெரிவித்துள்ளார்.

Comments