நினைத்தது யாரோ’ , நினைத்த படி!!!

23rd of June 2013
சென்னை::விக்ரமன் இயக்கத்தில் புதுமுகங்கள் ரிஜித், நிமிஷா மற்றும் பலர் நடிக்க, பால்ராஜ் இசையமைப்பில் உருவாகியுள்ள ‘நினைத்தது யாரோ’ படம் மூலம் படத் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள நிறுவனம் அபிஷேக் பிலிம்ஸ்.
இதன் தயாரிப்பாளர்களான ரமேஷ் மற்றும் இமானுவேல் ‘நினைத்தது யாரோ’ படத்தை பார்த்துவிட்டு அவர்கள் நினைத்தபடியே படம் பிரமாதமாக வந்துள்ளது என இயக்குனர் விக்ரமனை பாராட்டியுள்ளனர்.
 
அது மட்டுமல்ல, இந்த படத்தின் தரம் தொடர்ந்து அவர்கள் பல படங்களைத் தயாரிக்க ஆணிவேராக அமைந்துள்ளது என்றும் கூறியுள்ளனர்.
விக்ரமன் இயக்கத்தில் முதல் படத்தைத் தயாரித்து இன்று புகழ் பெற்ற தயாரிப்பு நிறுவனங்களாக  சூப்பர் குட் பிலிம்ஸ், ஆஸ்கர் பிலிம்ஸ் விளங்கி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந் நிறுவனம் அடுத்து ‘அட்டகத்தி’ தினேஷ், ஹரிப்ரியா, காவ்யா ஷெட்டி நடிக்கும் ‘வாராயோ வெண்ணிலாவே’ படத்தைத் தயாரித்து வருகிறது.
இதற்கடுத்து புதிய இயக்குனர்களை வைத்து இரண்டு படங்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளார்கள்.

Comments