கின்னஸில் இடம் பிடித்த ஸ்டண்ட் மாஸ்டர் ஜூடோ ரத்தினம்!!!

Sunday,2nd of June 2013
சென்னை::கின்னஸ் சாதனையில் இடம் பிடித்தார் ஸ்டண்ட் மாஸ்டர் ஜூடோ ரத்தினம். ஜூடோ கே.கே.ரத்தினம் தாமரைக்குளம் படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் ஆனவர். தொடர்ந்து மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த கொஞ்சும்குமரி படத்தின் மூலம் ஸ்டண்ட் மாஸ்டராக அறிமுகம் ஆனார்.
 
தொடர்ந்த 1200 படங்களுக்கு ஸ்டண்ட் மாஸ்டராக பணிபுரிந்துள்ளார். 63 கதாநாயகர்களுக்கு ஸ்டண்ட் காட்சிகளை அமைத்து உள்ள இவர், கின்னஸ் சாதனை படைத்துள்ளார். ஆசியாவிலும் சரி, இந்தியாவிலும் சரி, யாரும் 1200 படங்களுக்கு ஸ்டண்ட் மாஸ்டராக பணிபுரிந்தது இல்லை.
 
 குறிப்பாக ரஜினி நடித்த முரட்டுக்களை படத்தில் இடம் பெற்ற ரயில் சண்டை காட்சி இவரை பேச வைத்தது. இவரது சாதனைகள் மேலும் தொடர்ந்தது.
சமீபத்தில் சுந்தர்.சி கதாநாயகனாக அறிமுகம் ஆன தலைநகரம் படத்தில் வில்லனாக நடித்தார்.  இவரது சாதனையை பாராட்டி, ராயல் அக்ரே டெய்ரி லிமிடெட் நிறுவனம் சார்பில் இவருக்கு பாராட்டு விழா நடத்தியது.
 
இந்த விழாரில் ஏ.வி.எம்.சரவணன் இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் ஆகியோர் கலந்து கொண்டு, வாழ்நாள் சாதனை விருதை ஸ்டண்ட் மாஸ்டர் கே.கே.ரத்தினத்திற்கு வழங்கினார்கள். மேலும் ஸ்டண்ட் மாஸ்டர் ஜூடோ கே.கே.ரத்தினம் எழுதிய தாமரைக்குளம் டூ தலைநகரம் என்ற சுயசரிதை புத்தகத்தை  வெளியிட்டுள்ளார்.
 
ஜூடோ கே.கே.ரத்தினம் முதல்வர் ஜெயலலிதாவுக்கு வேண்டுகோள் கடிதம் எழுதியுள்ளார். அதில் தனக்கு கலைமாமணி விருது இதுவரை வழங்கப்படல்லை என்றும், தனக்கு வழங்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Comments