விக்ரம் கைவிரித்ததால் சசிகுமாரை நாடிய டைரக்டர் பாலா!!!

Sunday, June 16, 2013
சென்னை::அதனால், விக்ரமுக்கு மாற்று நடிகர் தேடித்தொடங்கிய பாலா, இப்போது தனது சிஷ்யர் சசிகுமாரையே விக்ரம் இடத்துக்கு தேர்வு செய்திருக்கிறார். பாலாவிடமிருந்து இத்தனை சீக்கிரம் தனக்கு அழைப்பு வருமென்று எதிர்பார்க்காத சசிகுமார் மிகுந்த சந்தோசததில் இருக்கிறார். மேலும், இப்படம் ஏற்கனவே பாலா இயக்கிய பிதாமகன், அவன் இவன் படங்களை போன்று இரண்டு ஹீரோ சப்ஜெக்ட்டாம். அதனால் இன்னொரு நடிகராக யாரை நடிக்க வைக்கலாம் என்று அவர் யோசித்ததும் அவரது யோசனைக்குள் வந்து நின்றவர் பரதேசி அதர்வாதானாம். அடடா வெண்ணெய் கையிலேயே இருக்கே என்று அவரை உடனடியாக கமிட் பண்ணிய பாலா, விரைவில் இராமேஸ்வரம் பகுதியில் படப்பிடிப்பு நடத்த தயாராகி வருகிறாராம்.

மேலும், புதிய படத்தின் ஸ்க்ரிப்ட் வேலைகளை பக்காவாக முடித்து விட்ட பாலா, தலைப்பை இன்னமும் முடிவு செய்யவில்லையாம். பரதேசி போன்று மொத்த படப்பிடிப்பும் முடிந்து படம் ரிலீசாகும நேரத்தில்தான் அறிவிப்பாராம்.
சேது, பிதாமகன் படங்களில் விக்ரமை இயக்கிய பாலா, மீண்டும் அவரை வைத்து தனது அடுத்த படத்தை இயக்க நினைத்தார். ஆனால், பாலா படத்தில் நடிப்பதற்கு விக்ரம் ஆவலாக இருந்தபோதும், ஐ படத்தில் அவர் சிக்கியிருக்கிறாரே. மெகா பட்ஜெட் படம் வேறு. அதனால், அந்த படத்திலிருந்து ஷங்கர் எப்போது என்னை விடுவிப்பார் என்பது எனக்கேத் தெரியாது என்று தன் நிலையை பாலாவிடம் சொல்லியிருக்கிறார்.  ஆனால், விக்ரமுக்காக பல மாதங்கள் காத்திருக்கலாம் என்றாலும், அவரது உடம்பை வறுத்தி மெலிய வைத்திருக்கிறார். இனி அவர் ஐ படத்தில் நடித்து முடித்து விட்டு வந்தால், அவரது உடல்கட்டு பழைய நிலைக்கு வரவே பல மாதங்கள் தாக்குப்பிடிக்கும் என்பதால், விக்ரமை வைத்து இயக்கும் திட்டத்தை கைவிட்டு விட்டார் பாலா.

Comments