திருமணத்துக்கு சம்மதம் சொன்ன சித்தார்த் பெற்றோர்!!!

19th of June 2013
சென்னை::ஒருவழியாக சித்தார்த் - சமந்தா காதல், விரைவில் திருமணத்தை எட்டப்போகிறது.  இதுவரை வதந்தியாகவே இருந்து வந்த சித்தார்த்& சமந்தா காதல் இப்போது உறுதியாகிவிட்டது.
 
இருவரும் விரையில் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார். இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்துவிட்ட நிலையில் அதற்கான ஏற்பாடுகளில் சித்தார்த் தீவிரமாக உள்ளார்.
 
அண்மையில் சித்தார்த், தன் பெற்றோரிடம் சமந்தாவை அறிமுகப்படுத்தி வைத்ததாகவும் அவர்களுக்கு சமந்தாவை ரொம்ப பிடித்துவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
 
இதனையடுத்து இருவீட்டாரும் திருமணத்தை உடனடியாக முடித்துவிட வேண்டும் என்று சொல்கிறார்களாம். எனவேதான், சமந்தாவும் புதிய படங்களை ஒப்புக் கொள்வதை குறைத்துவிட்டாத கூறப்படுகிறது.
 
அநேகமாக இந்த ஆண்டு இறுதிக்குள் திருமணம் நடந்து விடும் என்கிறார்கள்.
திரையுலகில் தனக்கு நெருக்கமானவர்களிடம் மட்டும் இந்த திருமண விஷயத்தை சித்தார்த் சொல்லி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

Comments