‘தீயா…வெற்றி’ , திகட்டும் சந்தோஷம்’ – சித்தார்த்!!!

24th of June 2013
சென்னை::அண்மையில் சித்தார்த்-ஹன்சிகா நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் ‘தீயா வேலை செய்யணும் குமாரு’. இந்தப் படத்தின் வெற்றி சித்தார்த்தை உற்சாகமடையச் செய்துளளது. இந்நிலையில் ‘தீயா வேலை செய்யணும் குமாரு’ மாபெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து பத்திரிகையாளர்களைச் சந்தித்து தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார் சித்தார்த்.

அப்போது பேசிய அவர் படம் ரிலீசான முதல் வாரத்துல தமிழ்நாட்டுல வசூல் 10 கோடி ரூபாய் தாண்டியிருக்குன்னு தயாரிப்பாளர் சொல்றாரு. ஆந்திராவுலயும் படம் நல்லா போயிட்டிருக்கு. இதுவரைக்கும் நான் பண்ண படங்கள்லயே இவ்வளவு கலெக்ஷன் முதல் வாரத்துலயே வந்தது இதுதான் முதல் முறை. கன்ட்ரோல் பண்ண முடியாத ஒரு சந்தோஷம்.

எல்லாரும் ஏன் நீங்க தமிழ்ப்படங்கள்ல நடிக்கிறதில்லேன்னு ஒரு 10 வருஷமா கேட்டுக்கிட்டிருக்காங்க.., அதுக்கு நான் நல்ல டைரக்டர்களையும், நல்ல ஸ்க்ரிப்ட்டையும் தேடி ஓடிக்கிட்டிருக்கேன்னு சொன்னேன்.
இந்த தீயா வேலை செய்யணும் படத்துக்கப்புறம் ஜிகர்தண்டா, காவியத்தலைவன், அப்புறம் என்னோட சொந்த புரொடக்‌ஷன்ல ஒரு படம்னு நடிக்கப்போறேன்.

இந்த படம் பண்றதுக்கு முன்னாடி எனக்கும் சுந்தர் . சிக்கும் அவ்வளவா பழக்கம் இல்லை. படம் முடிஞ்சதும் எங்க குடும்பத்துல ஒருத்தரா எனக்கு நெருக்கமாயிட்டாரு. குஷ்பு மேடத்துக்கு போன் பண்ணி, ஐ மிஸ் சுந்தர் .சி ன்னு சொன்னேன். எங்க டைரக்டர் மணிரத்னத்துக்கு அப்புறம் நிறைய விஷயங்கள் ஒரு சீனியர் டைரக்டர் கிட்ட கத்துக்கிற விஷயங்கள் இந்த படத்துல கிடைச்சது. எனக்கு நிறைய சொல்லிக் கொடுத்திருக்காரு.
சமந்தா,ஹன்ஷிகா மோத்வானி ரெணு பேர்ல யார் பழகுறந்துக்கு ரொம்ப ஸ்வீட்டா இருப்பாங்க..? என்ற கேள்விக்கு பதிலளித்த சித்தார்த்
கண்டிப்பா சமந்தா தான் ஸ்வீட்டா இருப்பாங்க. ஏன்னா சமந்தா தமிழ்ல பேசுவாங்க, ஹன்ஷிகா தமிழ்ல பேச மாட்டாங்க, ஹன்ஷிகாவும் ஸ்வீட் தான்”. நீங்க சமந்தாவா..? ஹன்ஷிகாவான்னு கேட்டீங்கன்னா நான் சமந்தா தான் சொல்வேன், வேற ஏதாவது சாய்ஸா இருந்தா வேணும்னா ஹன்ஷிகாவை சொல்லிக்கிறேன். என்றார்.

உங்கள் திருமணம் எப்போது? ஏதாவது நடிகையை திருமணம் செய்வீர்களா? என்ற கேள்விக்கு பதிலளித்த சித்தார்த்,இப்போதைக்கு நான் என்னோட சினிமா கேரியரைத்தான் பாலோ பண்ணிக்கிட்டிருக்கேன். ஆனா கண்டிப்பாக நான் நடிகையை திருமணம் செய்துகொள்ள மாட்டேன், விரைவில் திருமணம் செய்துகொள்வேன், ஆனால் அது எப்போது என்று தான் தெரியவில்லை.

அப்போது அவர் பேசியதாவது,
 
“ரொம்ப நாளா பசில இருந்த ஒருத்தனுக்கு , கன்னா பின்னான்னு வடை, பாயசம் விருந்து கொடுத்தால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கேன்  நான். கழுத்து வரைக்கும் திகட்டற மாதிரி ஒரு சந்தோஷம்.
 
படம் ரிலீசான முதல் வாரத்துல தமிழ்நாட்டுல வசூல் 10 கோடி ரூபாய் தாண்டியிருக்குன்னு தயாரிப்பாளர் சொல்றாரு. ஆந்திராவுலயும் படம் நல்லா போயிட்டிருக்கு. இதுவரைக்கும் நான் பண்ண படங்கள்லயே இவ்வளவு கலெக்ஷன் முதல் வாரத்துலயே வந்தது இதுதான் முதல் முறை. கன்ட்ரோல் பண்ண முடியாத ஒரு சந்தோஷம்.
 
தமிழ்ப் பக்கம் ஏன் வரமாட்டேன்றீங்கன்னு 10 வருஷமா ரெகுலரா கேட்டுக்கிட்டே இருக்காங்க. மத்த மொழிகள்ல நல்ல ஸ்கிரிப்ட் கிடைச்சி, நம்மள அப்படியே கூப்பிட்டுட்டு போயிட்டாங்க. இப்ப என் 10 வருஷ கேரியல்ர தொடர்ந்து தமிழ்ல 4 படம் வச்சிட்டு இருக்கேன். ரொம்ப சந்தோஷமா இருக்கு.
அடுத்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்துல ‘ஜிகர்தன்டா’ , வசந்தபாலன் இயக்கத்துல ‘காவியத் தலைவன்’, சொந்தத் தயாரிப்புல ஒரு படம் பண்றேன்.
ஆடியன்ஸுக்கு ஆடியன்ஸ் வித்தியாசம் இருக்கு. தமிழ் சினிமா ஆடியன்ஸ் ஒரு பொக்கிஷம் மாதிரி. ஒரே மாசத்துல, இந்த மாதிரி காமெடி படத்தையும் ஹிட்டாக்கறங்க, ‘சூது கவ்வும்’ மாதிரியான படத்தையும் ஹிட்டாக்கறாங்க. வித விதமான படங்களை ரசிக்கணும்னு எதிர்பார்க்கறாங்க.
 
இந்த படம் பண்றதுக்கு முன்னாடி எனக்கும் சுந்தர் . சிக்கும் அவ்வளவா பழக்கம் இல்லை. படம் முடிஞ்சதும் எங்க குடும்பத்துல ஒருத்தரா எனக்கு நெருக்கமாயிட்டாரு. குஷ்பு மேடத்துக்கு போன் பண்ணி, ஐ மிஸ் சுந்தர் .சி ன்னு சொன்னேன். எங்க டைரக்டர் மணிரத்னத்துக்கு அப்புறம் நிறைய விஷயங்கள் ஒரு சீனியர் டைரக்டர் கிட்ட கத்துக்கிற விஷயங்கள் இந்த படத்துல கிடைச்சது. எனக்கு நிறைய சொல்லிக் கொடுத்திருக்காரு.
தீயா வேலை செஞ்சிட்ட சித்து’ திரும்பவும் தமிழ்ப் பக்கம் வந்துட்டன்னு நிறைய சீனியர்ஸ் போன் பண்ணி பாராட்டறாங்க. இந்த படம் பாசிட்டிவான மைல் கல்லா என் வாழ்க்கையில அமைஞ்சிருக்கு. திரும்பவும் காத்து நம்ம பக்கம் வீசுதுன்னா ஹாயா, ஜாலியா இருக்காம, தீயா வேலை செஞ்சி நல்ல படங்களோட வருவேன்.முக்கியமா எங்க அம்மா, அப்பா  சார்பாவும் நன்றி சொல்லிக்கிறேன்,” என்றார்.

Comments