பூபதிபாண்டியன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன்!!!

28th of June 2013
சென்னை::கேடி பில்லா கில்லாடி ரங்கா, எதிர் நீச்சல் ஆகிய வெற்றிப்படங்களை தொடர்ந்து இப்போது சிவகார்த்திகேயனின் காட்டில் நல்ல மழைதான். இந்த இரண்டு படங்களும் தொடர் ஹிட் படங்களாக அமைந்து விட்டதால் அவரை தேடி வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.
அந்த வகையில் அவர் எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் எஸ்.மதன் தயாரிக்கும் ஒரு புதிய படத்திலும், ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கும் இன்னொரு படத்திலும், இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிக்கும் மற்றொரு படத்திலும் நடிக்க கமிட் ஆகியிருக்கிறார்.இயக்குநர் ஏஆர் முருகதாஸ் தயாரிக்கும் புதிய படத்தில்தான் சிவகார்த்திகேயனும் ஹன்ஸிகாவும் ஜோடி சேருகிறார்கள்.

மேலும் ‘எதிர் நீச்சல்’ படத்தை டைரக்ட் செய்த துரை செந்தில்குமார் டைரக்‌ஷனில், மீண்டும் தனுஷ் தயாரிக்கும் ஒரு புதிய படத்திலும் சிவகார்த்திகேயன் நடிக்கிறார். இந்த நான்கு படங்களில் துரை செந்தில்குமார் டைரக்ட் செய்யப்போகும் படம் தான் முதலில் படப்பிடிப்பு ஆரம்பமாக இருக்கிறது.

இதனிடையே லிங்குசாமி தயாரிக்கும் புதிய படத்திலும்
சிவகார்த்திகேயன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்தப் படத்தை பூபதி பாண்டியன் இயக்குகிறார். சத்யா இசையமைக்கிறார். தற்போது பூபதிபாண்டியன் விஷாலை வைத்து பட்டத்துயானை என்கிற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தை முடித்த கையோடு சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்தை இயக்குவார் எனத் தெரிகிறது. படப்பிடிப்பு அநேகமாக செப்டம்பர் மாதம் துவங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Comments