கிளாமருக்கு தயாரான ப்ரியா ஆனந்த்!!!

28th of June 2013
சென்னை::கோவா படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் ப்ரியா ஆனந்த். அதன் பின் தெலுங்கில் ஒரு ரவுண்டு அடித்து விட்டு, தற்போது மீண்டும் தமிழுக்கு வந்துள்ளார்.
 
அண்மையில் இவரது நடிப்பில் வெளியான எதிர்நீச்சல் திரைப்படம் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இதனால் இயக்குனர்களின் கவனம் ப்ரியா ஆனந்த் பக்கம் திரும்பியுள்ளது. சின்ன பட்ஜெட் படங்கள் மட்டுமின்றி, பெரிய பட்ஜெட் படங்களிலும் அம்மணிக்கு வாய்ப்புகள் வருகிறதாம். தற்போது இவர் அரிமா நம்பி படத்தில் விக்ரம் பிரபுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.
 
இப்படத்திற்கு ஓவர் கிளாமர் தேவை என இயக்குனர் சொன்னதுமே, எந்தவித எதிர்ப்பும் சொல்லாமல் உடனே ஓ.கே சொல்லி விட்டாராம். இதுவரை கவர்ச்சியின்றி நடித்து வந்த ப்ரியா ஆனந்த் இப்போது கவர்ச்சி காட்டிட சம்மதம் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Comments