கோலிவுட் ஹீரோக்களுக்கு போன் போட்டு நட்பு வளர்க்கும் சமந்தா!!!

25th of June 2013
சென்னை::ஆந்திர சினிமாவில் எப்போதுமே அதிரடியான நடிகைகள் மட்டும்தான் நீண்டகாலம் நீடிக்க முடியும். நான் முட்டி வரைதான் கிளாமர் காட்டுவேன். இடுப்பு ஏரியாவ காட்டவே மாட்டேன் என்று பில்டப் கொடுக்கிற நடிகைகளை அங்கே என்ட்ரி பண்ண விடுவதே இல்லை. அடுத்த ரயிலை பிடித்து ரிட்டன் அனுப்பி விடுவார்கள். இதில், சமந்தா உள்ளிட்ட சில நடிகைகள் தாக்குப்பிடிப்பது பெரிய காரியம்தான்.

ராஜமெளலி இயக்கிய நான் ஈ படம்தான் சமந்தாவுக்கு ஆந்திராவில் சிவப்பு கம்பள வரவேற்பு கொடுக்க வைத்தது. அந்த பெயரை வைத்துக்கொண்டு எப்படியோ இவ்வளவு காலமும் தாக்குப்பிடித்து விட்டார். இதற்கிடையே தன்னிடம் யாரும் ஓவர் கவர்ச்சி கேட்டு வற்புறுத்தக்கூடாது என்பதற்காக நான் சித்தார்த் ஆளு என்ற பில்டப்பை கொண்டு தற்போது தனது இமேஜை காத்துக்கொண்டு வருகிறார்.

இருப்பினும் ஆந்திராவில் டீசன்டான நடிகை என்ற இமேஜை நீண்ட காலம் தக்க வைத்துக்கொள்ள முடியாது என்பதை புரிந்து கொண்ட சமந்தா, சூர்யாவுடன் நடிக்கும் தமிழ்ப்படத்திற்கு பிறகு நிரந்தர கோலிவுட் நடிகையாக திட்டமிட்டிருக்கிறாராம். அப்படி தான் தமிழ் நடிகையாக வேண்டுமென்றால் இங்குள்ள நடிகர்களின் நட்பு வேண்டும் என்று நினைக்கும் சமந்தா, இப்போது இங்குள்ள நடிகர்கள் நடித்த படங்கள் ஆந்திராவில் ஓடினால், அதை தியேட்டருக்கு சென்று பார்த்து விட்டு, சம்பந்தப்பட்ட நடிகர்களுக்கு போன்போட்டு அவர்களின் நடிப்பை பெருமையாக சொல்லி மனதில் இடம்பிடிக்கத் தொடங்கியிருக்கிறார்.

Comments