கிளிப்பிங்ஸ்!!!கிளிப்பிங்ஸ்!!!கிளிப்பிங்ஸ்!!!

Wednesday,29th of May 2013
சென்னை::சித்திரம் பேசுதடி‘, ‘ஜெயம் கொண்டான்‘ போன்ற தமிழ் படங்களில் நடித்த பாவனா தற்போது மலையாளம், கன்னட படங்களில் மட்டும் கவனம் செலுத்துகிறார். மலையாளத்தில் ‘மட்டன்செரி‘ என்ற படத்தில் நடிக்கும் பாவனா, வழக்கு மொழி பேச தடுமாறினார். திருச்சூரை சேர்ந்த இவர் தனது வட்டார வழக்கில் சரளமாக பேசுவார். ஆனால் படத்தில் கொச்சி வட்டார வழக்கு பயன¢படுத்தப்படுகிறது. இதை பேசுவதற்கு தடுமாறினார் பாவனா. அவருக்கு பட இயக்குனர் ஜீன் பால் லால் பயிற்சி அளித்தபிறகு மொழியை சரியாக பேசி பாராட்டு பெற்றாராம்.

இந்தியில் ரீமேக் ஆகிறது ‘நேரம்’

அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் உருவான படம் ‘நேரம்‘ நிவின் ஹீரோ, நஸ்ரியா நாசிம் ஹீரோயின். சமீபத்தில் தமிழ் மற்றும் மலையாளத்தில் வெளியானது. மனிதனுக்கு நல்ல நேரம் வந்தால் சந்தோஷம் அடைவான், கெட்ட நேரம் வந்தால் அல்லல்படுவான் என்ற கருவை மையமாக வைத்து உருவான படம். இந்தியில் நடிப்பதற்காக சிலருடன் பேச்சுவார்த்தை நடக்கிறது. அது முடிவானதும் படத்தில் நடிப்பவர்கள் பற்றி அறிவிப்பாராம் இயக்குனர்.

வடிவேலுவின் 32 ஸ்பெஷல்

இரண்டு வருடத்துக்கு பிறகு ‘கஜ புஜ புஜ கஜ தெனாலிராமனும் கிருஷ்ணதேவராயனும்‘ என்ற படத்தில் நடிக்கிறார் வடிவேலு. இரட்டை வேடம் ஏற்றிருக்கும் அவர் சொந்த குரலில் பாடலும் பாடுகிறார். நடிக்க வந்ததுடன் பாடுவதற்கும் இது ரீ என்ட்ரியாகிவிட்டது என மகிழ்ச்சி தெரிவிக்கும் வடிவேலு, ஏற்கனவே 31 பாடல்கள் பாடி இருக்கிறார். இது அவருக்கு 32வதாக அமைந்திருக்கும் ஸ்பெஷல் பாடலாம்.

காவ்யா மாஜி கணவர் டும் டும்

‘சாது மிரண்டால்‘, ‘என் மன வானில்‘, ‘காசி‘ ஆகிய படங்களில் நடித்தவர் காவ்யா மாதவன். இவருக்கும் தொழில் அதிபர் நிஷால் சந்திராவுக்கும் திருமணம் நடந்தது. பின்னர் இருவரும் விவாகரத்து பெற்றனர். இதையடுத்து படங்களில் மீண்டும் நடித்து வருகிறார் காவ்யா. இந்நிலையில் நடிகையின் மாஜி கணவர் நிஷாலுக்கும் ஐஏஎஸ் மாணவி ரம்யா நாத்துக்கும் கடந்தவாரம் மேவேயில்காராவில் திருமணம் நடந்தது. இதையடுத்து இருவரும் ஸ்பெயின் நாட்டுக்கு 12 நாள் தேனிலவு கொண்டாட புறப்பட்டு சென்றனர்.
 
 
கமல் இயக்கத்தில் காஜல்

விஜய், சூர்யா, கார்த்தியுடன் ஜோடிபோட்ட காஜல் அகர்வால் அடுத்து கமல் நடிக்கும் புதிய படத்தில் ஹீரோயினாக நடிக்க உள்ளார். ஹீரோயின் என்றாலும் கமலுக்கு ஜோடியா என்பது முடிவாகவில்லையாம். லிங்குசாமி தயாரிக்கிறார். ‘விஸ்வரூபம் 2’ படத்தை இயக்குவதில் பிஸியாக இருக்கும் கமல் புதிய படத்தை வரும் அக்டோபர் மாதம் தொடங்குவார் என்று கூறப்படுகிறது.

பூஜாவின் இழப்பு

‘நான் கடவுள்’ படத்தில் பார்வையற்ற பெண்ணாக நடித்திருந்த பூஜாவுக்கு எதிர்பார்த்தளவுக்கு வாய்ப்புகள் வரவில்லை என்றாலும் ‘விடியும் முன்‘ என்ற படத்தில் வலுவான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அதிக படங்களில் நடிக்காததற்கு காரணம் ‘நான் கடவுள்‘ படத்தில் ஏற்ற கதாபாத்திரமா என்றதற்கு பதில் அளித்த அவர், நான் கடவுள் படத்தில் நடித்ததால் இழப்பு எதுவும் இல்லை. அதேசமயம் ‘பரதேசி‘ படத்தில் நடிக்காததுதான் தனக்கு ஏற்பட்ட இழப்பு என்கிறார்.

ஷோபனாவுக்கு புது வாய்ப்பு

படங்களில் நடிப்பதை குறைத்துக்கொண்டு நடனப்பள்ளி மீது கவனம் செலுத்தி வருகிறார் ஷோபனா. இந்நிலையில் ரஜினியின் ‘கோச்சடையான்’ படத்தில் நடனத்துக்கு முக்கியத்துவம் உள்ள வேடத்தில் நடித்தார். இதையடுத்து மலையாளத்தில் ‘தட்டத்தின் மரயத்து‘ பட இயக்குனர் வினித் சீனிவாசன் இயக்கும் புதிய படத்தில் நடிக்க ஷோபனாவிடம் கால்ஷீட் கேட்டிருக்கிறார்கள். த்ரில்லர் படமான இதில் இயக்குனரின் தம்பி தயன் ஹீரோவாக அறிமுகமாகிறார்...
 
பொங்கலுக்கு ‘ஐ ‘நண்பன் படத்துக்கு பிறகு ஷங்கர் இயக்கி வரும் படம் ‘ஐ‘. விக்ரம் ஹீரோ. ‘அந்நியன்‘ படத்துக்கு பிறகு இந்த கூட்டணி இணைந்திருக்கிறது. ஹீரோயின் எமி ஜாக்ஸன். இப்படத்தின் ஷூட்டிங் நடக்கும் அதேவேளையில் ஸ்பெஷல் எபெக்ட் பணிகளும் மும்முரமாக நடக்கிறது.

‘லார்ட் ஆப் த ரிங்ஸ் ஹாலிவுட் படத்துக்கு பணியாற்றிய குழு இதற்கான பணியில் ஈடுபட்டிருக்கிறது. இக்குழு தற்போது ஏற்றுள்ள பணியை முடிக்க கூடுதல் அவகாசம் கேட்டிருக்கிறதாம். எனவே அடுத்தகட்ட ஷூட்டிங் ஜூன் மாதம் 2வது வாரம் தொடங்க உள்ளது. இந்த ஆண்டு இறுதியில்தான் ஷூட்டிங் முடிவடையும் என்பதால் 2014ம் ஆண்டு பொங்கலுக்குதான் படம் ரிலீஸ் ஆகுமாம்.
  
வசந்தபாலன் இயக்கத்தில் பிருத்விராஜ் அங்காடி தெரு, வெயில், அரவாண் படங்களை இயக்கியவர் வசந்த பாலன். இவர் அடுத்து இயக்கும் படத்தில் பிருத்விராஜ் 2வது ஹீரோவாக நடிக்க உள்ளார். மெயின் ஹீரோ சித்தார்த். செப்டம்பர் மாதம் ஷூட்டிங் தொடங்க உள்ளது. ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்கிறார்.

கனா கண்டேன், பாரிஜாதம், மொழி, சத்தம்போடாதே, கண்ணாமூச்சி ஏனடா, வெள்ளித்திரை, நினைத்தாலே இனிக்கும் உள்ளிட்ட படங்களில் நடித்த பிருத்விராஜ் கடைசியாக தமிழில் நடித்து திரைக்கு வந்த படம் உருமி.

சிங்கத்தை தத்தெடுத்த பிரியங்கா கடந்த ஆண்டு வட இந்தியாவில் ராஞ்சி அருகில் உள்ள விலங்குகள் பூங்காவிலிருந்து துர்கா என்ற புலியை ஒரு வருடத்துக்கு தத்து எடுத்து அதற்கு உணவு வழங்க பணம் அளித்ததுபோல் இந்த ஆண்டு சுந்தரி என்ற பெண் சிங்கத்தை தத்தெடுத்திருக்கிறார் பிரியங்கா சோப்ரா.

இறுதிகட்ட ஷூட்டிங் ராஜேஷ் இயக்கும் ஆல் இன் ஆல் அழகுராஜா படம், இறுதிகட்ட ஷூட்டிங்கில் உள்ளது. சத்தமே இல்லாமல் 70 சதவீத படத்தை முடித்துவிட்டார் ராஜேஷ். கார்த்தி, காஜல் அகர்வால், நான் மகான் அல்ல படத்துக்கு பிறகு இதில் இணைகிறார்கள். கார்த்தியின் அண்ணனாக பிரபு, அண்ணியாக சரண்யா நடிக்கிறார். வழக்கம்போல் ராஜேஷின் இந்த படத்திலும் சந்தானத்துக்கு முக்கிய ரோல். ஜூலையில் படம் ரிலீசாகிறது...
 
கும்கி’, ‘சுந்தரபாண்டியன்‘ படத்தையடுத்து லட்சுமி மேனன் நடித்திருக்கும் படம் ‘குட்டிப்புலி‘. இப்படம் மூலம் ஹாட்ரிக் வெற்றிக்காக காத்திருக்கும் அவர் இயக்குனர் கவுதம் மேனன், பாலா, மணிரத்னம், ஏ.ஆர்.முருகதாஸ் ஆகியோர் படங்களில் நடிக்க வேண்டும் என்பது ஆசையாம். குறிப்பாக பாலா இயக்கத்தில் ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும். இல்லாவிட்டால் நடிகையானதற்கு நிறைவு கிடைக்காதாம்.
 

Comments