ரவிதேஜாவுடன் குத்தாட்டம் போடும் லட்சுமிராய்!!!

Friday,17th of May 2013
சென்னை::ஒன்பதுல குரு படத்துக்குப்பிறகு கோடம்பாக்கத்தை காலி பண்ணி விட்டு பெங்களூர், மும்பை என்று இடம்பெயர்ந்து விட்டார் லட்சுமிராய். தற்போது சில கன்னட படங்களில் நடித்து வருபவர், இந்தி படங்களை கைப்பற்றவும் தீவிரமான முயற்சிகளை எடுத்து வருகிறாராம். ஏற்கனவே சில பாலிவுட் நடிகர்களின் நட்பு இருப்பதால், அவர்களின் சிபாரிசின்பேரிலும் புதிய வாய்ப்புகளுக்கு போராடிக்கொண்டிருக்கிறாராம் லட்சுமிராய்.
இந்த நேரத்தில் தெலுங்கில் ரவிதேஜாவுக்கு ஜோடியாக அஞ்சலி, ஸ்ருதிஹாசன் நடித்து வரும் பலுபு என்ற படத்தில் ஒரு பாட்டுக்கு நடனமாட நடிகை தேடிவரும் சமாச்சாரத்தை கேள்விப்பட்ட லட்சுமிராய், ஓடோடிச்சென்று அந்த வாய்ப்பை லபக்கிக்கொண்டாராம். ஆந்திராவில் முன்னணி நடிகரான ரவிதேஜா போன்ற நடிகர்களுடன் நடித்தால் அடுத்தடுத்து படங்கள் கிடைக்கும் என்பதால் குத்தாட்டம் போட சம்மதித்த அவர், அந்த பாடலில் ஆட கொடுத்த கூலியை எண்ணிப்பார்க்காமல் பெற்றுக்கொண்டாராம். 

Comments