யாருக்கும் நான் போட்டியில்லை: நஸ்ரியா நாசிம்!!!

Tuesday,28th of May 2013
சென்னை::நேரம்’ படத்தில் ஹீரோயினாக நடித்துள்ள நஸ்ரியா நாசிம் கூறியதாவது: அல்போன்ஸ் புத்தரன் இயக்கிய வீடியோ ஆல்பம் ஒன்றில் நான் நடித்தேன். அவரே ‘நேரம்’ படத்தை இயக்கியதால் என்னை நடிக்க வைத்தார். அந்த ஆல்பத்தை பார்த்துதான் ‘திருமணம் என்னும் நிக்காஹ்’, தனுசுடன் ‘நய்யாண்டி’ பட வாய்ப்புகள் கிடைத்தன. அடுத்து ஆர்யாவுடன் ‘ராஜா ராணி’ படத்திலும் நடிக்கிறேன். ‘நேரம்’ படத்தில் என் நடிப்பு பேசப்பட்டதால் அதிக வாய்ப்புகள் வருகிறது.

எல்லாவற்றையும் ஒப்புக்கொள்ளவில்லை. தமிழில் நிறைய மலையாள நடிகைகள் இருக்கிறார்கள். அவர்களைப் போட்டியாக நினைக்கவில்லை. அவர்களுடன் நானும் ஒருவராக இருப்பதில் மகிழ்ச்சி. ‘திருமணம் என்னும் நிக்காஹ்’ படத்தின் கதை வித்தியாசமானது. அதில் ஜெய், பாண்டியராஜனுடன் நடித்தது புதுமையான அனுபவம். ‘நய்யாண்டி’ ஷூட்டிங்கில் தனுஷ் எனக்கு நடிப்பில் உதவி செய்தார். ‘ராஜா ராணி’யில் ஆர்யாவின் முன்னாள் காதலியாக வருகிறேன்.

Comments