ஆஸ்திரேலியாவில் உள்ள போன்டி பீச் என்னை மிகவும் கவர்ந்து விட்டது: அமலாபால்!!!

Wednesday,8th of May 2013
சென்னை::ஆஸ்திரேலியாவில் உள்ள போன்டி பீச் என்னை மிகவும் கவர்ந்து விட்டது என்றார் அமலாபால். விஜய், அமலாபால் ஜோடியாக நடிக்கும் தலைவா படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு இந்த கடற்கரை பீச்சில்தான் நடந்தது. இதற்காக அங்கு பல நாட்கள் முகாமிட்டு நடித்து விட்டு சென்னை திரும்பிய அமலாபால் கூறியதாவது:-

ஆஸ்திரேலியாவில் பிரபலமானது போன்டி பீச். என்னை அது மிகவும் கவர்ந்தது. அந்த கடற்கரையில் படப்பிடிப்பு  நடந்த போது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. ஒவ்வொரு நிமிடத்தையும் அனுபவித்தேன். பீச்சிலேயே யோகா செய்தேன். மாலை வேளைகளில் கடற்கரை ஓரத்தில் ஓடினேன். படப்பிடிப்பு குழுவினர் எல்லேருமே பீச் அழகை அனுபவித்தோம். பாட்டு பாடினோம். நடனம் ஆடினோம். கலகலப்பாக பேசிக் கொண்டும் இருந்தோம். வீட்டு ஞாபகம் வரவில்லை. காரணம் அந்த கடற்கரையில் நிறைய இந்தியர்கள் இருந்தார்கள்.

தமிழர்கள், மலையாளிகள் மற்றும் ஆந்திராவை சேர்ந்தவர்களெல்லாம் இருந்தார்கள். படப்பிடிப்பை அவர்கள் பார்த்தனர். நமது மொழியில்தான் அவர்களிடம் பேசினோம். ரொம்ப சந்தோஷமாக இருந்தது.

இவ்வாறு அமலாபால் கூறினார்.
tamil matrimony_INNER_468x60.gif
 

Comments