தமிழில் பெரிய என்ட்ரிக்காக காத்திருந்தேன்- சமந்தா!!!

Monday,20th of May 2013
சென்னை::பாணா காத்தாடி சமந்தா, நான் ஈ படத்துக்குப்பிறகு தமிழில் மணிரத்னம், ஷங்கர் என்ற ஜாம்பவான் டைரக்டர்களின் படங்களில் நடிப்பதற்கு கமிட்டானவர். தோல் அலர்ஜி

இந்த நிலையில், தமிழில் அடுத்து பெரிய என்ட்ரி கிடைத்தால் மட்டுமே நடிப்பேன் என்று காத்திருந்த சமந்தாவுக்கு நேரம் கைகூடி விட்டது. வேட்டை படத்துக்குப்பிறகு சூர்யாவை வைத்து தான் இயக்கும் படத்திற்கு சில மாதங்களாக கதாநாயகி வேட்டையில் ஈடுபட்டிருந்த லிங்குசாமி, சமந்தாவிடம் பேச்சுவார்த்தை நடத்தி அட்வான்ஸ் கொடுத்து விட்டாராம். இந்த தகவலை தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள சமந்தா, இந்த படத்திற்கு பிறகு தெலுங்கைப்போலவே தமிழுக்கும் முக்கியத்துவம் கொடுப்பேன் என்று தெரிவித்துள்ளார். அதோடு, இந்தமுறை எனது பிரவேசம் அதிரடியாக இருக்கும் என்று தகவல் வெளியிட்டு பீல்டில் உள்ள கோலிவுட் நடிகைகளுக்கு ஷாக் கொடுத்திருக்கிறார் சமந்தா
 
நோய் காரணமாக அந்த படங்களில் இருந்து விலக வேண்டிய கட்டாயத்துக்கு ஆளானார். இருப்பினும் அடுத்தபடியாக ஆந்திர சினிமாவில் விழுந்த மார்க்கெட்டை நிறுத்தி விட்டார் சமந்தா. அதற்காக தனது குடும்ப நடிகை என்கிற இமேஜை தளர்த்தி கவர்ச்சியாகவும் நடித்த சமந்தா, இப்போது அங்குள்ள முன்னணி நடிகைகளுக்கு சவாலாக இருந்து வருகிறார்.

Comments